சேலம், மார்ச் 4 - சேலம் மாவட்டத்தில், மாற்று கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா சனியன்று நடை பெற்றது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், பல்வேறு கட்சியில் இருந்து விலகி 152 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். முன்னதாக, தனி யார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் துவக்கமாக மார்க்சிஸ்ட் கட்சி யின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பிரபு தலைமை ஏற்றார். இவ்விழாவில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் மேவை. சண்முக ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, பொன்.ரமணி மற்றும் ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.