districts

img

கணவன் நினைவாக அரசு பள்ளிக்கு கட்டடம்!

சூலூர், ஜூன் 5- கோவையில் இறந்து போன தனது கணவனின் நினைவு கூறும்  வகையில் அரசு பள்ளி குழந்தைக ளுக்கு சொந்த செலவில் பள்ளிக் கூடம் கட்டிக் கொடுத்து உள்ளார் மனைவி. ஷாஜகான் மனைவிக்காக தாஜ்மஹால் கட்டியது போன்று கண வனுக்காக பள்ளிக்கூடம் கட்டிய தாக அப்பகுதி மக்கள் பெண் மணியை பாராட்டி வருகிறார்கள். கோவை மாவட்டம், சூலூர், பட் டணம் பகுதியைச் சேர்ந்தவர் வேணு கோபால். கட்டுமான நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு மணிமுத்து  என்ற மனைவியும் ஒரு மகளும் உள் ளார். இந்நிலையில், கடந்த சில வரு டங்களுக்கு முன் வேணுகோபால் கால மானார். கணவன் இறந்த நிலையில், அவர் நிர்வகித்து வந்த கட்டுமான தொழில் நிறுவனத்தை அவரது மனைவி மணிமுத்து முன் நின்று நடத்தி வருகிறார். இந்நிலையில், பட்டணம் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி கட்டிடம் இல் லாமல் இருந்து வந்துள்ளனர். இத னையறிந்து மணிமுத்து தனது கண வன் நினைவாக அரசு பள்ளி மாண வர்களுக்கு பள்ளிக்கூட கட்டடம் கட்ட முடிவெடுத்துள்ளார். இதனை யடுத்து, மணிமுத்து தனது சொந்த  செலவில் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு தனது கணவன் நினைவாக தரமான பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளார். அரசு பள்ளி மாண வர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு எடுப்ப தற்கு அனைத்து வசதிகளும் கொண்ட பள்ளி கட்டடமாக இது வடி வமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசிய மணிமுத்து, கணவன் நினைவாக இந்த பள்ளிக் கூட கட்டத்தை மாணவர்களுக்கு பயன் படுத்த கட்டிக் கொண்டிருக்கிறோம். அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளிக்கூடமாக இது இருக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வசதி செய்து கொடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள் ளது. பணம் உள்ள பொதுமக்கள் அரசு பள்ளிகளுக்கு இது போன்ற உதவிகளை செய்ய வர வேண்டும் எனவும், இது ஒரு புதிய முயற்சி யாக இருக்கும், என்றார்.  இந்தப் பள்ளி கட்டிடம் திங்க ளன்று திறந்து வைக்கப்பட்டது. இவ் விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.