districts

img

தொட்டிக்குள் விழுந்து 6 வயது சிறுவன் பலி: கட்டட பணியை முடிக்காமல் பள்ளியை திறக்க எதிர்ப்பு

கோவை, அக்.9- கோவையில் தொடக் கப்பள்ளி தண்ணீர் தொட்டிக் குள் விழுந்து 6 வயது சிறு வன் உயிரிழந்த நிலையில், கட்டட பணியை முடிக்கா மல் பள்ளியை திறக்க அப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சாலை, நாகராஜபுரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக் கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தற்போது கட்டட வேலை நடந்து வருகிறது. இதற் காக அங்கு தண்ணீர் தொட்டி ஒன்றும் உள் ளது. இதனிடையே கடந்த அக்.6 ஆம் தேதி யன்று அந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரி ழந்தார். இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், காலாண்டு விடுமுறை முடிந்து திங்களன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட் டன. அதன்படி நாகராஜபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியும் திறக்கப்பட்டது. மேலும், அதன் அருகே உள்ள அங்கன்வாடி மையமும் திறக்கப்பட்டது. இதுபற்றிய தக வல் அறிந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு முற் றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் அங்கு திறந்திருந்த அங்கன்வாடி மையத் திற்கு சென்று, அங்கு பணியில் இருந்தவரி டம் பள்ளியில் வேலை நடந்து வரும் நிலை யில், வேலையை முடிக்காமல் எப்படி பள் ளியை திறக்கலாம் என வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். மேலும், பள்ளியை உடனே மூட வேண் டும். வேலை முடிந்த பின்னர் திறக்க வேண் டும் என முழக்கமிட்டனர். இதைத்தொடர்ந்து அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தொண்டாமுத்தூர் போலீசார், கல்வித்துறை  அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். கட்டட வேலைகள் முடிக்கும் வரை பள்ளி திறக் கப்படாது என்றும், அதுவரை அருகிலுள்ள  இடத்தில் அங்கன்வாடி செயல்படும் எனவும் உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து மக் கள் கலைந்து சென்றனர்.