கோவை, ஜூலை 21- கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த 5 அடி நீள பாம்பை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான அலுவலர்கள் மற்றும் பணியா ளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். பொதுமக்கள், அலுவ லர்கள் மற்றும் பணியாளர்களுக்கென வாகன நிறுத்துமிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பின்புறம் உள் ளது. அதே இடத்தில் ஒருபுறம் புதர்களும் மண்டி கிடக்கின் றன. எனவே அடிக்கடி இங்கு பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தென்படுகின்றன. இந்நிலையில், வானக நிறுத்து மிடத்தில் உள்ள அறையில் சுமார் 5 அடி நீள சாரைப்பாம்பு பதுங்கியிருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள், ஆட்சி யர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களிடம் தெரி வித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட் டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் 5 நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து சென்ற னர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், அடிக்கடி இப் பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தென்படுவது அதிர்ச்சியளிக்கிறது. மாவட்ட நிர்வாகம், ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.