districts

img

ஆர்வத்துடன் வாக்களித்த 104 வயது முதியவர்

கோவை, ஏப். 19- கணியூர் அடுத்த ஊஞ்சப் பாளையத்தில் 104 வயது முதியவர் தனது பேரன், பேத் திகளுடன் வாக்குச்சாவ டிக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்த செயல் அனை வரின் கவனத்தை ஈரத்துள் ளது.  பதினெட்டாவது மக்க ளவைத் தேர்தல் முதல் கட்ட மாக தமிழகத்தில் இன்று ஒரே கட்ட மாக நடைபெற்று வருகிறது. வாக்களிக்க காலை ஏழு மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் நின்று வாக்களித்து வரு கின்றனர். இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணை யம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. மேலும் வாக்களிக்க வாக்கு சாவடிக்கு வர இயலாத முதியவர் களின் இல்லத்திற்கே சென்று தபால் வாக்கை  பெற்று வருகிறது.  இந்நிலையில் கோவை மக்களவை தேர்த லில் தனது ஜனநாயக கடமையை நிறை வேற்ற 104 வயது முதியவர் தனது மகன்  மற்றும் பேரன் கொள்ளு பேரன்களுடன் வந்து வாக்க ளித்துள்ளார். கோவை மாவட் டம் கணியூர் அடுத்த ஊஞ்சபா ளையம் கிராமத்தை சேர்ந்த வர் விவசாயி கணபதி கவுண் டர் இவர் தனது 104 ஆவது வயதில் மகள், பேரன், கொள்ளு பேரன்களுடன் வந்து கோவை மக்களவைத் தேர்தலில் தனது வாக்கினை  பதிவு செய்தார். முன்னதாக வீட்டில் இருந்து காரில் வந்த கணபதி வாக்கு  சாவடிக்கு சென்று வாக்களித்தது அங்கிருந் தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கணபதி கூறுகையில் தான்  21 வயதில் இருந்து வாக்களித்து வருவதா கவும் இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்க ளிக்க தவறியது இல்லை வெளியூர் சென்றி ருந்தாலும் வாக்குப்பதிவு அன்று வந்து  தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி யுள்ளதாகவும் அனைவரும் வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை நிறை வேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத் தார்.