districts

img

ஈரோடு: ஒரே நாளில் 906 பேருக்கு தொற்று

ஈரோடு, ஜன.19- ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் கடந்த  ஜன.7ம் தேதி கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட வரின் எண்ணிக்கை 100ஐ கடந்தது. இதன்பின்னர் ஒவ் வொரு நாளும் கொரோனா புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் புதனன்று சுகாதாரத் துறையினர் வெளியிட்ட பட்டியலில் ஒரேநாளில் இது வரை இல்லாத அளவாக 906 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்து உள்ளது. குண மடைந்தவர்கள் எண்ணிக் கையை விட, தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறு வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது.