districts

img

டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வில் திண்ணை மாணவர்கள் 83 பேர் தேர்ச்சி

தேனி, ஜூலை 15- தமிழ்நாடு அரசு தேர்வாணை யம் தொகுதி 4 தேர்வில் தேனியில் உள்ள திண்ணை மனிதவள மேம்  பாடு அறக்கட்டளையில் பயின்ற  83 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேனியில் உள்ள  திண்ணை  மனிதவள மேம்பாடு அறக்கட் டளை சார்பாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தொகுதி 4 இள நிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்  கெழுத்தர், பதவிகளுக்கு தேர்வு  எழுதும்  ஏழை, எளிய மாணவர் களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்  கப்பட்டது. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 83 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு துறை சார்ந்த விளக்கங்கள் அளிக்  கப்பட்டது .வழிகாட்டுதல் வகுப் பினை திண்ணை  மனிதவள மேம்  பாடு அறக்கட்டளை ஒருங்கி ணைப்பாளர் செந்தில்குமார், மக்  கள் தொடர்பாளர் சீனிவாசப் பெரு மாள் ஆகியோர் வழங்கினர். தொழில்நுட்பம் சார்ந்த துறை களுக்கு நாகராஜ், ஈஸ்வரன் ,குல சேகரபாண்டியன், திருமுருகன், வேல்ராஜ், கனி, மகாலட்சமி ஆகி யோரும் தொழில்நுட்பம் சாரா  துறைகளுக்கு மோகன், முனி யாண்டி, மீரான் மைதீன், சீனிவாசப்  பெருமாள் ,சதீஸ்குமார், பிரபா வதி, உதய்ராஜா, கீதா, ரெங்கநாதன் ஆகியோர் பயிற்சி வழங்கினர்.