districts

கோவை வழியாக 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோவை, நவ. 17 – சபரிமலைக்கு பக்தர்கள் அதிகம் செல்லும் சீசன் துவங்கி யுள்ளதால், மகாராஷ்டிரா, ஆந் திரம், தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கோவை வழித்தடத்தில் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள்  இயக்கப்படுவதாக பாலக்காடு  கோட்ட ரயில்வே தெரிவித் துள்ளது.  இது குறித்து பாலக்காடு கோட்ட  ரயில்வே நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியி ருப்பதாவது, செகந்தராபாதில் இருந்து நவம்பர் 20, 27 ஆகிய  தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.50 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் - கோட்டயம் சிறப்பு  ரயில் (எண்: 07125) நவம்பர் 21, 28  ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை)  இரவு 9 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும். கோட்டயத்தில் இருந்து நவம் பர் 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட் கிழமை) இரவு 11.15 மணிக்குப் புறப் படும் கோட்டயம் - செகந்தராபாத் சிறப்பு ரயில் (எண்: 07126) நவம்பர் 23, 30 ஆகிய தேதிகளில்  (புதன்கிழமை) காலை 4 மணிக்கு செகந்தராபாத்தைச் சென் றடையும். இந்த ரயிலானது எர்ணகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக் காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட் பாடி, ரேனிகுண்டா, கூடூர், நெல் லூர், ஓங்கோல், சிராலா, தெனாலி,  குண்டூர், நால்கொண்டா, சேரலப் பள்ளி உள்ளிட்ட ரயில் நிலையங் களில் நின்று செல்லும். கொல்லத்தில் இருந்து நவம்பர்  22, டிசம்பர் 6, 20, ஜனவரி 10 ஆகிய  தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) காலை 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் - செகந்தராபாத் சபரி மலை விரைவு ரயில் (எண்: 07118)  நவம்பர் 23, டிசம்பர் 7, 21, ஜனவரி  11 ஆகிய தேதிகளில் (புதன் கிழமை) காலை 9.05 மணிக்கு  செகந்தராபாத்தைச் சென்ற டையும்.

செகந்தராபாதில் இருந்து நவம்பர் 27, டிசம்பா் 11, 25, ஜனவரி  1,15 ஆகிய தேதிகளில் (ஞாயிற் றுக்கிழமை) பிற்பகல் 2.40  மணிக்குப் புறப்படும் செகந்தரா பாத் - கொல்லம் சபரிமலை விரைவு  ரயில் (எண்: 07121) நவம்பர் 28,  டிசம்பர் 12, 26, ஜனவரி 2,16 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை)இரவு 11 மணிக்கு கொல்லம் சென்ற டையும். கொல்லத்தில் இருந்து நவம்பர்  29, டிசம்பர் 13, 27, ஜனவரி 3, 17  ஆகிய தேதிகளில் (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் 2.30 மணிக்குப்  புறப்படும் கொல்லம் - செகந்தரா பாத் சபரிமலை விரைவு ரயில் (எண்:  07122) நவம்பர் 30, டிசம்பர் 14, 28,  ஜனவரி 4,18 ஆகிய  தேதிகளில் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு  செகந்தராபாதைச் சென்றடையும். செகந்தராபாதில் இருந்து நவம்பர் 21, 28 ஆகிய தேதி களில் (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் செகந் தராபாத் - கொல்லம் சபரிமலை சிறப்பு ரயில் (எண்: 07123) நவம்பர்  22, 29 ஆகிய தேதிகளில் (செவ் வாய்க்கிழமை) இரவு 11.50 மணிக்கு கொல்லத்தைச் சென்ற டையும்.

கொல்லத்தில் இருந்து நவம்பர்  23, 30 ஆகிய தேதிகளில் (புதன் கிழமை) பிற்பகல் 2.30 மணிக்குப்  புறப்படும் கொல்லம் - செகந்தரா பாத் சிறப்பு ரயில் (எண்: 07124)  நவம்பர் 24, டிசம்பர் 1 ஆகிய தேதி களில் (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும். கொல்லத்தில் இருந்து நவம்பர் 19, 26 ஆகிய தேதிகளில்  (சனிக்கிழமை) மாலை 3 மணிக்குப்  புறப்படும் கொல்லம் - செகந்த ராபாத் சிறப்பு ரயில் (எண்: 07130)  நவம்பர் 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 12.30 மணிக்கு செகந்தராபாத்தைச் சென் றடையும். இந்த ரயிலானது, காயன்குளம்,  மாவேலிக்கரா, செங்கன்னூா், திரு வல்லா, செங்கன்சேரி, கோட்டயம்,  எர்ணகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, ராசம்பேட்டா, கமலாபுரம், கொண் டாபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங் களில் நின்று செல்லும் என தெரிவிக் கப்பட்டுள்ளது