districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மலேசியாவில் விற்கப்பட்ட பெண் மீட்பு

சேலம், பிப்.25- வேலை வாங்கித் தருவதாகக்கூறி மலேசியா நாட் டிற்கு அனுப்பி வைத்து, விற்கப்பட்ட பெண் அதிகாரிக ளின் துரித நடவடிக்கைகளால் மீட்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணை, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக மது அலி, சென்னையை சேர்ந்த முத்து ஆகியோர் மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சரியான வேலை கிடைக் காத நிலையில், வீட்டு வேலை செய்ய சொல்லி அப் பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், ரூ.1.26 லட்சத்திற்கு தன்னை விற்றுள்ளது அப் பெண்ணிற்கு தெரியவந்தது. இதுபற்றி தனது உறவி னர்களிடம் தெரிவித்து அவர் கதறியுள்ளார். மேலும், தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவரை மீட்ப தற்காக உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகி னர். சேலம் சரக காவல் துணை துணைத்தலைவர் உமாவிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையி னர் அப்பெண்ணை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட னர். இந்நிலையில், அதிகாரிகளின் துரித நடவடிக்கை யால் அப்பெண், மலேசியாவிலிருந்து சனியன்று விமா னம் மூலம் சென்னை வந்தடைந்தார். இதன்பின் அவர் தனது உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு காவல்  துறை துணைத்தலைவர் உமாவை சந்தித்து நன்றி தெரி வித்தார். இதைத்தொடர்ந்து அப்பெண் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனக்கு மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக அழைத்து சென்று கழிவறையை கழுவ சொன்னதுடன் அங்கு அடித்து கொடுமைப்படுத்தினர். இதனால் எனக்கு தற்போது வரை காது சரியாக கேட் காத நிலை உள்ளது. எனவே, இதற்கு காரணமான முக மது அலி, முத்து, அருள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மான் வேட்டை: 8 பேர் மீது வழக்கு

தருமபுரி, பிப்.25- தருமபுரி வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக்காட்டில், புள்ளிமானை வேட்டையாடிய 8 பேர் மீது வனத்துறை யினர் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்தனர். தருமபுரி வனச்சரகத்திற்குட்பட்ட பரிகம் காப்புக் காடு, பரிகம் வடக்கு வனக்காவல் சுற்று எல்லைக்குட் பட்ட மலையப்ப நகர் காட்டுவளவு சரகத்தில், கடந்த பிப்.4 ஆம் தேதி மேல்பூரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த துரை (45) என்பவர் புள்ளிமான் ஒன்றை வேட்டையாடி கறியாக வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அப் பகுதியில் தருமபுரி வனச்சரக பணியாளர்கள், வனப் பாதுகாப்பு படை பணியாளர்கள் கூட்டாக தணிக்கை மேற்கொண்டு வருவதை கண்ட துரை மற்றும் அடையா ளம் தெரியாத 7 நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதன் பின் துரைக்கு இரண்டு முறை ‘காரணம் கேட்கும்  அழைப்பானை’ வழங்கி, அவரை தருமபுரி வனச்சரக  அலுவலகம் அழைத்து வந்து வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டனர். அதில், தாங்கள் செய்த குற் றத்தை ஒப்புக்கொண்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதன்பேரில் மேல்பூரிக்கல் பகுதியைச் சேர்ந்த துரை, தமிழ்செல்வன், பெரியசாமி, தொப்பூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ், தம்மம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார், சித்தநாதன், அதியமான் கோட்டை யைச் சேர்ந்த வீரசிம்மன், ஜெய்சங்கர் ஆகிய 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வனவிலங்கினை வேட் டையாடிய குற்றத்திற்காக ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டது.

சேலத்தில் 8 மையங்களில் தட்டச்சு தேர்வு

சேலம், பிப்.25- தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககங்களின் கீழ் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தட்டச்சு பயிற்சி நிறு வனங்கள் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இங்கு பயிற்சி பெற்றவர்களுக்கான இளநிலை, முது நிலை தட்டச்சு தேர்வுகள், பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் என ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி பிப்ரவரி தேர்வுகள் சனியன்று மாநிலம் முழு வதும் தொடங்கியது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக், கோரிமேடு  சிஎஸ்ஐ பாலிடெக்னிக், வனவாசி அரசு பாலிடெக்னிக்  கல்லூரி, கோட்டை மாரியம்மன் பாலிடெக்னிக், சேலம்  பாலிடெக்னிக், கொங்கு பாலிடெக்னிக், காவேரி பாலி டெக்னிக் மற்றும் எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரி என 8  இடங்களில் மையம் அமைக்கப்பட்டிருந்தது. முதல் நாளான சனியன்று இளநிலை தமிழ், ஆங்கிலம் மற்றும்  முதுகலை தமிழ், ஆங்கில தேர்வுகள் நடந்தன. இதே போல் 2 ஆம் நாளான ஞாயிறன்று பயிற்சி நிலைய வரி சைப்படி தேர்வுகள் நடைபெற்றன.

சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்களை மேம்படுத்த பிரதமர் மோடி இன்று அடிக்கல்!

சேலம், பிப்.25- அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்களை மேம்ப டுத்த பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று (இன்று) அடிக்கல் நாட்டுகிறார். இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா செய்தியா ளர்களிடம் கூறுகையில், அம்ருத் பாரத் திட் டத்தின் கீழ், நாடு முழுவதும் 554 ரயில் நிலை யங்களை மேம்படுத்தும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பிர தமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி திங்களன்று (இன்று) அடிக்கல் நாட்டு கிறார். இதில், சேலம் கோட்டத்துக்குட்பட்ட  திருப்பத்தூர், மொரப்பூர், பொம்மிடி, ஈரோடு, கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், நாமக் கல், சின்னசேலம் ஆகிய 8 ரயில் நிலையங் கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல, சேலம் கோட்டத்தில் 32  சாலை மேம்பாலங்கள், சுரங்கப்பாதை பணி களில், 21 முடிவுற்ற திட்டப்பணிகள் திங்க ளன்று (இன்று) பயன்பாட்டிற்கு வரவுள்ளன.  ஆளில்லா லெவல் கிராசிங்குகளுக்கு மாற் றாக, மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைப்பதன் மூலம் கால விரயம் மிச்சமாவது டன், பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும், என்றார்.

ஏற்காடு: பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்

சேலம், பிப்.25- ஏற்காடு அண்ணா பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசித்து, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வரு கின்றனர். தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலாத் தலங்க ளில் ஒன்று சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு.  இங்கு நிலவும் குளிர்ச்சியான காலநிலை சுற் றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து வருகி றது. இதனால் இங்கு வருடந்தோரும் பல் வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பய ணிகள் வருகின்றனர். இங்குள்ள தாவரவி யல் பூங்கா, மான் பூங்கா, அண்ணா பூங்கா,  ஏரிக்கரை பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி உள் ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்து  சுற்றுலாப் பயணிகள் ரசிக்கின்றனர். அது போல் ஏரியில் குதுகலமாக படகுசவாரி செய்து உற்சாகம் அடைகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டுக்கான கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சிக்கான முன்னேற்பாடுகள் தோட்டக்கலைத்துறை சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக  மலர் செடிகள் நடவு செய்து பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். மேலும், பூங்கா வில் பல்வேறு வகை ரோஜா செடிகள் வளர்க் கப்படுகிறது. இந்த ரோஜா மலர்களுக்கு தனி கவனம் செலுத்தி வளர்க்கப்படுகிறது. தற் போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலை யில், ஏற்காடு அண்ணா பூங்காவில் பல வகை நிறங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கு கிறது. கண்களை ஈர்க்கும் விதமாக பூத்துக் குலுங்கும் இந்த மலர்களை வியந்து பார்த்தப் படி, அதன் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்து சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.