சேலம், பிப்.6- ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், கந்தம்பட்டி நெடுஞ் சாலை, திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு சேலம் - இட்டேரி சாலையில் 35 சென்ட் நிலம் உள்ளது. இதனை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு தனது குடும்பத்தினருடன் வந் தார். அப்போது அவர்கள் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண் ணையை குழந்தை உட்பட 8 பேர் மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற னர். இதைப்பார்த்த அருகிலிருந்த போலீசார், அவர்கள் மீது நீரை ஊற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்தை சேலம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் சட்டத்திற்கு புறம் பாக மாற்றிக்கொண்டதாக நீதிமன்றத் தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலை யில், அரசியல் கட்சி நிர்வாகியின் துணையோடு, அடியாட்களை கொண்டு எங்களுடைய நிலத்தில் அத்துமீறி கம்பி வேலி அமைத்துள்ளார். இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார ளித்த போதும், எந்தவொரு நடவடிக் கையும் எடுக்கவில்லை. எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, எங்களது நிலத்தை மீட்டுத்தர வேண்டும், என்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது.