திருப்பூர், டிச. 21 - திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் உள்ள பாரதிபுரம் நடு நிலைப் பள்ளிக்கும், அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் அலுவலக உபயோகத் திற்காகவும், மாணவர் பயன்பாட்டிற்கா கவும், பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன், தொகுதி வளர்ச்சி நிதி யில் இருந்து சுமார் ரூ. 8 லட்சம் மதிப்பில் சேர், டேபிள், பீரோக்களை பள்ளிக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் முன்னி லையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்எல்ஏ கலந்து கொண்டு பொருட்களை ஒப்படைத் தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.பரமசிவம் உள் பட ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் திரளாக பங்கேற்றனர். பாரதிபுரம் பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வழங்க மேல்நிலைத் தொட்டி தேவை என்று தலைமை ஆசிரி யர் காளீஸ்வரி சுப்பிரமணியம் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தார். அதேபோல் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணே சன், துணைத் தலைவர் எஸ். பரமசிவம் ஆகியோர் ஊராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநி யோகம் செய்வதற்கு உதவி யாக 4 புதிய மேல்நிலைத் தொட்டிகள் கட்டித்தர தொகுதி வளர்ச்சி நிதியில் பணம் ஒதுக்கி தரும்படி கோரிக்கை மனு கொடுத்தனர். கோரிக் கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப் பதாக எம்எல்ஏ ஆனந்தன் கூறினார்.