கோவை, ஏப். 19- கோவை நாடாளுமன்ற தொகு தியில் விறுவிறுப்பான வாக்குப்ப திவு நடைபெற்றது. இதில், 71.17 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி யுள்ளது. மக்களவைத் தேர்தலை முன் னிட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி மக்க ளவைத் தொகுதிகளில் 3,096 வாக்குச்சாவடிகளில் 36 லட்சத்து 99 ஆயிரத்து 292 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் வியாழக்கிழமை அந் தந்த வாக்குச்சாவடி மையங்க ளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந் தன. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு வசதியாக சாமி யானா பந்தல், குடிநீர், கழிப்பிடம், சக்கரநாற்காலி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவல ருமான கிராந்திகுமார் பாடி, கோவை அரசு கலைக்கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது, அவர் செய்தியாளர்களி டம் கூறுகையில், “ வாக்காளர்க ளுக்கு பணம் பட்டுவாடா செய்யப் பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கண்காணிப்பு குழு மூலமாக அனைத்து வங்கி பணப் பரிவர்த்த னைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எந்த வங்கிக் கணக் கில் இருந்து டிஜிட்டல் பணப்பரி வர்த்தனை மூலமாக அதிகப்படி யாக பணம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது என் றார். கோவை மாநகராட்சி ஆணை யர் மா.சிவகுரு பிரபாகரன், ஆர். எஸ்.புரம் பி.வி.பி. நினைவு மாநக ராட்சிப்பள்ளியில் வாக்களித்தார். முதியவர்கள், மாற்றுத்திறனளி கள், பார்வை குறைபாடுகள் உள்ள வர்கள் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து செல் லப்பட்டனர். வெயிலின் தாக்கத் தால் பல இடங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது. கோடை விடுமுறை மற்றும் தேர்தலில் வாக்களிப்பதற்காக, கோவையில் தங்கி வேலை பார்க் கும் பலரும் தங்கள் சொந்த ஊர்க ளுக்கு சென்று விட்டதாலும் மாந கரப் பகுதிகளில் வாகனப் போக்கு வரத்து மிகக் குறைவாகவே காணப் பட்டது. வழக்கமாக நூற்றுக்கணக் கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரும் அவி நாசி சாலை, திருச்சி சாலை, சத்தி மற்றும் பொள்ளாச்சி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கொரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு சாலைகள், வெள்ளிக்கி ழமை காலியாகக் காட்சியளித்தன. கோவை மக்களவை தொகு திக்கு உள்பட்ட 6 சட்டசபைத் தொகுதிகளில் சூலூர் சட்டப்பேர வைக்கு உள்பட்ட வாக்குச்சாவடி களில் காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அதன்படி, சூலூர் பகுதிகளில் காலை 7 முதல் 9 மணி வரை 11.25 ச தவீதம் வாக்குகள் பதிவாகின. இதையடுத்து 9 முதல் 11 மணி வரை, 16.08 சதவீதம் வாக்குகள் அதிக ரித்து 27.33 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 11 முதல் 1 மணி வரை, 14.76 சதவீதம் வாக் குகள் அதிகரித்து 42.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 1 முதல் 3 வரையிலான இடைவெளியில் 13.75 சதவீதம் வாக்குகள் அதிக ரித்து 55.84 சதவீதம் வாக்குகள் பதி வாகின. 3 முதல் 5 மணி வரை 68.24 வாக்குகள் பதிவாகின. இறுதியாக, 6 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 62 சதவீதம் வாக்குகள் பதிவாகி பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி இரண்டா மிடம் பிடித்தது. இதேபோன்று, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 9.13 சத வீதம், 9 மணி முதல் 11 மணி வரை 22.36 சதவீதம் வாக்குகள், 11 முதல் 1 மணி வரை 40.77 சதவீதம் வாக்கு கள், 1 மணி முதல் 3 மணி வரை 53.45 சதவீதம் வாக்குகளும் பதி வாகின. 3 மணி முதல் 5 மணி வரை 64.99 சதவீதம் வாக்குகள் பதி வாகின. இரவு 7 மணி நிலவரப்படி 72.22 சதவிகிக வாக்குகுள் பதி வாகியுள்ளது.