திருப்பூர், ஏப்.20 - திருப்பூர் நாடாளுமன்ற தொகு தியில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும், ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெருந்துறையில் 264 வாக் குச்சாவடிகள், பவானியில் 289, அந்தியூரில் 262, கோபிசெட்டிபா ளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, திருப்பூர் தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் உள்ளன. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 7 லட்சத்து 91 ஆயி ரத்து 24 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 17 ஆயிரத்து 245 பெண் வாக்காளர்களும், 252 மாற்று பாலி னத்தவரும் என மொத்தம் 16 லட் சத்து 8 ஆயிரத்து 521 பேர் உள்ள னர். திருப்பூர் தொகுதியில் 13 வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இடம் பெற்றிருந்தன. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெள்ளியன்று நடை பெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகி யுள்ளது. இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக பதிவான வாக்கு விபரம்: பெருந்துறை 77.7 சதவிகிதம், பவானி 78.97 சதவிகி தம், அந்தியூர் 76.59 சதவிகிதம், கோபிசெட்டிபாளையம் 78.52 சதவி கிதம், திருப்பூர் வடக்கு 59.29 சதவிகி தம், திருப்பூர் தெற்கு 61.03 சதவிகி தம் என்ற அளவில் வாக்குகள் பதி வாகியுள்ளன. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 293 வாக்குச்சாவடி கள் பதற்றமானவை என அடையா ளம் கண்டறியப்பட்டது. இந்த வாக் குச் சாவடிகளில் துணை ராணுவத் தினர் மற்றும் போலீசார் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், அந்த மையங்கள் முழுவதும் கண்கா ணிப்பு கேமரா மூலம் கண்காணிக் கப்பட்டது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சிறு சிறு பிரச்சனை களை தவிர, மற்றபடி அமைதியாக வும், அதேநேரத்தில் பல வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பாகவும் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது. இதனையடுத்து, வெள்ளியன்று இரவு அனைத்து சாவடிகளில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக் குச்சாவடி முகவர்கள் முன்னிலை யில் சீல்வைக்கப்பட்டது. பின்னர், இவை அனைத்தையும் எல்ஆர்ஜி மகளிர் அரசு கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாது காப்பு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அர சியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் கிறிஸ்துராஜ் அறைக்கு சீல் வைத் தார்.