districts

img

610 மாணவர்களுக்கு தங்க நாணயம், மடிக்கணினி: ஐவிடிபி நிறுவனம் வழங்கியது

கிருஷ்ணகிரி,ஜூலை 25- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொண்டு நிறு வனமான ஐவிடிபி, மக ளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் குழந்தை களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் கள் பெறுவதை ஊக்கப் படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ‘கோசலை’ விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற 8 மாணவர்கள் ஒவ்வொரு வருக்கும் 4 கிராம் தங்க நாணயமும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற 5 மாணவர்களுக்கு மடிக் கணினியும் வழங்கப் பட்டது. 90 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 610 மாணவர்களுக்கு ஒரு கிராம் வீதம் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது.  இந்த விழா ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் தலைவர் குழந்தை பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் தமிழ்ச் சங்க செயலாளர் முனைவர் கோபால நாராயணமூர்த்தி, திருப்பத்தூர் தூய நெஞ்சக கல்லூரி கூடுதல் முதல்வர் முனைவர் மரிய ஆரோக்கியராஜ், ஆகி யோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிராம வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர்கள், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர், வேலூர் அக்ஸிலியம் கல்லூரியின் முன்னாள் முதல்வர் யூஜின், கிருஷ்ண கிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் அருட் சகோதரிகள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஐவிடிபி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜோஸ்வா, நந்தினி, ஜோஸ்வா ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.