சென்னை, ஆக.30– சென்னையில் உள்ள கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை கடந்த 8 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது. இம்மருத்துவமனையில் கடந்த 2015–ம் ஆண்டு எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைகளில் மூன்றில் ஒரு பங்கு டிரான்ஸ் போராமினல் டிஸ்கெக்டோமிகள் என்னும் குறிப்பிட்ட பகுதியில் வலியில்லாத வகையில் மயமக்க மருந்து செலுத்தி செய்யப்பட்டன. மீதமுள்ளவை பொது மயக்க மருந்து அளிக்கப்பட்டு இன்டர்லாமினார் நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பானி கிரண் கூறினார். இந்த 578 அறுவை சிகிச்சையில் கடந்த ஆண்டில் மட்டும் 300 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சாதனையை குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.