தருமபுரி, பிப்.13- மின்வாரியத்துறை காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை உட னடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தரும புரியில் மின்வாரிய தொழிற்சங்க கூட்ட மைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மின்துறையை பல துண்டுகளாக சிதைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 2023 ஆம் ஆண்டு டிச.1 ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கு, பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டும். ஓய்வூதியர்கள், மின்ஊழியர்கள், மின் நுகர்வோர், பாதிப் புக்குள்ளாகின்ற வகையில் போடப் பட்ட முத்தரப்பு ஒப்பந்த அரசாணையை அரசு உத்திரவாதத்துடன் முறைப டுத்த வேண்டும். மறுபகிர்வு முறையை கைவிட வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வா ரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார் பில், தருமபுரி மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் தீ. லெனின் மகேந்திரன் தலைமை வகித் தார். இதில் மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, எம்ளாயீஸ் பெடரேசன் மாவட் டத் தலைவர் அருளானந்தம், மாவட்டச் செயலாளர் கோகுல்ராஜ், ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சி.முருகன், மாவட்டச் செயலாளர் சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சிஐடியு கோட்டச் செயலாளர் கு.ஜெகநாதன் நன்றி கூறினார்.