5400 லிட்டர் போலி மதுபானம் பறிமுதல்: 5 பேர் கைது
நாமக்கல், ஏப்.3- திருச்செங்கோடு அருகே 5 ஆயி ரத்து 400 லிட்டர் போலி மதுபானங் களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு, தேவனாங்குறிச்சி சாலையி லுள்ள பனங்காட்டு பாளையம் பகுதி யில் போலி மதுபானம் உற்பத்தி செய் யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச் செங்கோடு காவல் துறையினர் அப்பகு தியில் அதிரடி சோதனை மேற்கொண் டனர். இதில் 5 ஆயிரத்து 400 லிட்டர் ஸ்பிரிட், போலி லேபிள்கள் மற்றும் காலி மதுபாட்டில்கள், மூடிகள், வெண் ணிலா சுவையூட்டி உள்ளிட்டவை பறிமு தல் செய்யபட்டன. இதில், தொடர்புடை யவர்கள் யார்? எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து துணை காவல் கண்பாணிப்பாளர் இமயவ ரம்பன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, திருச்செங்கோடு ஒன் றிய பகுதிகளில் உள்ள 13 அரசு மது பான கடைகளில் இரவு விற்பனைக்காக இந்த மதுபாட்டில்கள் தயாரித்துக் கொண்டு செல்லப்படுவதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்தது. வட்டூர் பெத்தாம்பட்டி பகுதியிலுள்ள மதுபானக் கடையில் பார் நடத்தி வரு பவர் மற்றும் விழுப்புரம் மாவட்டத் தைச் சேர்ந்த முத்துவேல், செந்தில், பிர காஷ், முரளி ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புதுச் சேரியிலிருந்து மதுபானம் தயாரிக்க பயன்படும் ஸ்பிரிட் ஐம்பது லிட்டர் மற் றும் 35 லிட்டர் கேன்களில் கொண்டு வந்து போலி மதுபானம் தயாரித்து இரவு நேர விற்பனைகளுக்கு மது பான கடைகளுக்கு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதற்கு பயன்படுத்திய ஆல்க ஹால் மீட்டர், 60 ஆயிரம் பாட்டில்கள், 40 ஆயிரம் மூடிகள் போலி லேபிள்கள் என வைத்திருந்த பொருட்கள் அனைத் தும், ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு இரண்டு சக்கர வாகனம், மினி லாரி ஆகி யவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், எங்கெல்லாம் போலி மதுபாட் டில்கள் தயார் செய்துள்ளனர்? என்பது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயதீர் வைத்துறை காவல் நிலைய ஆய்வா ளர் சுல்தான் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
கோவையில் வருமானவரித்துறை சோதனை
கோவை, ஏப்.3- கோவை சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிக ளில் டாக்டர்.முத்தூஸ் என்ற பெயரில் எலும்பு முறிவு சிகிச் சைக்கான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகளில், புதனன்று பிற்பகல் வருமானவ ரித்துறை அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முதலில் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற வருமானவரித்துறை அதி காரிகள், அங்கு சிறிது நேரம் இருந்தனர். இதனையடுத்து அங்கிருந்து கிளம்பி சரவணம்பட்டியில் உள்ள மருத்து வமனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் அலுவலகத்தில் சோதனையிட்டனர். பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை, சுமார் ஒரு மணி நேரம் சோதனையானது நடைபெற்றுள்ளது. சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் பின் னர் இங்கிருந்து கிளம்பிச் சென்றனர். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் மருத்துவ மனையில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தக வலின் பேரில் வருமான வரித்துறையினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கோவை, பொள்ளாச்சியில் மக்களவைத் தொகுதியில் 36.99 லட்சம் வாக்காளர்கள்
கோவை, ஏப்.3- கோவை, பொள்ளாச்சி மக்கள வைத் தொகுதிகளில் 36.99 லட்சம் வாக் காளர்கள் உள்ளனர். இரண்டு தொகுதிகளுக்கு உள்பட்ட 12 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கோவை வடக்கைத் தவிர மற்ற 11 தொகுதிகளிலும் ஆண்களைக் காட்டி லும் பெண் வாக்காளர்களே அதிக அள வில் உள்ளனர். மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதி களிலும் ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பணி கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 2 மாதங்க ளாக புதிதாக வாக்காளர்கள் இணைக் கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து, இறுதி வாக்கா ளர் பட்டியல் அண்மையில் வெளியி டப்பட்டன. அதன்படி கோவை, பொள் ளாச்சி இரு மக்களவைத் தொகுதி களிலும் சேர்த்து 36.99 லட்சம் வாக்கா ளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண்களைக் காட்டிலும் பொள்ளாச்சி தொகுதியில் 49 ஆயிரத்து 867 பெண் களும், கோவை தொகுதியில் 23 ஆயி ரத்து 45 பெண்களும் அதிகமாக உள்ள னர். கோவை கோவை தொகுதியில் பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்கா நல்லூர் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 6 சட்டப்பேரவை தொகுதிகளையும் சேர்த்து 10,41,349 ஆண்கள், 10,64,394 பெண்கள், 381 மூன்றாம் பாலினத்த வர்கள் என மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், கோவை வடக்குக் தொகுதியைத் தவிர மற்ற 5 தொகுதிகளிலும் ஆண்களைக் காட்டி லும் 23 ஆயிரத்து 045 பெண் வாக்கா ளர்கள் அதிகமாக உள்ளனர். பொள்ளாச்சி அதேபோன்று, பொள்ளாச்சி தொகு தியில் தொண்டாமுத்தூர், கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடு மலைபேட்டை, மடத்துக்குளம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 6 சட்டமன்ற தொகுதியிலும் பொள்ளாச்சி மக்கள வைத் தொகுதியில் மொத்தமாக 7,71,503 ஆண்கள், 8,21,370 பெண்கள், 295 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15,93,168 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தத் தொகுதி யிலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதி களிலும் சோ்த்து மொத்தமாக ஆண்க ளைக் காட்டிலும் 49 ஆயிரத்து 867 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு கோவை, ஏப்.3- சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை - ஜபல்பூர் இடையே இயக் கப்பட்டு வரும் சிறப்பு ரயிலின் (எண்: 02197) சேவை நிறை வடைய உள்ள நிலையில், இந்த ரயிலானது, ஏப்ரல் 8 முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போல், ஜபல்பூர் - கோவை வாராந்திர ரயில் (எண்: 02198) ஏப்ரல் 5 முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள் ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை இல்லாததால் விவசாயிகள் கவலை
மழை இல்லாததால் விவசாயிகள் கவலை உதகை, ஏப்.3- நீலகிரி மாவட்டமானது ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு பயிர் சாகுபடியிலும், சீதோஷ்ண நிலையிலும் அண்டை மாவட்டங்களை காட்டிலும் பெரு மளவு வேறுப்பட்டது. ஆண்டு சராசரி மழை அளவு, 152 செ.மீ ஆகும். இங்கு நிலவும் தட்ப வெப்பநிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. மேலும் காய் கறிகள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலைத் தோட்டப்பயிர்கள் ஆகி யவை படிமட்டங்கள் மற்றும் சில கிரமங்களில் குறுகிய சரி வான பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. மலையின் உயர மான பரப்பில் அதிகளவில் மலை காய்கறி விவசாயம் மேற் கொள்ளப்படுகிறது. எம்.பாலாடா, நஞ்சநாடு, கல்லக்கொரை ஹாடா, மணலாடா, தேனாடு கம்பை, கடநாடு, கொல்லிமலை ஓரநள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார மலை காய்கறி தோட்டங் களில் விதைப்பு பணி மேற்கொள்ள தோட்டங்களை தயார் படுத்தியுள்ள விவசாயிகள் மழை பொய்த்து வருவதால் விதைப்பு பணி மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால், விதைப்பு பணி மேற்கொண்ட விவசாயிகள் தோட் டங்களில் ஆங்காங்கே சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை ‘ஸ்பிரிங்ளர்’ உதவியுடன் பாய்ச்சி வருகின்றனர். நீலகிரியில் கார்போகம் விவசாயம் முக்கிய காலம் ஆகும். மழை பொய்த்ததால் குறுகிய கால விவசாயமான கலப்பு பயிர் விவசாயம் மேற்கொண்டு லாபம் பெற தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளை அறிவுறுத்தி வருகிறோம். இது வரை, 30 சதவீதம் விவசாயிகளுக்கு நுாறு சதவீதம் மானி யத்தில் ‘ஸ்பிரிங்ளர்’ கருவி வழங்கப்பட்டுள்ளது. கூட்டு பட்டா மற்றும் செக்ஷன், 17 நிலப்பிரச்னை உள்ளிட்ட சில காரணங்களால் மானியத்தில் அக்கருவிகள் விவசாயிக ளுக்கு வழங்க முடியவில்லை. “மழை பொய்த்ததால் விவ சாய பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதால் மழை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.’’ என்று விவசாயிகள் கூறினார்.
பறை இசைத்து, நடனமாடி வாக்குசேகரிப்பு
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்த லுக்கான பரப்புரையில் அரசியல் கட்சி யினர் தீவிரம் காட்டி வருகின்றனர். வாக் காளர்களை கவரும் விதமாக வேட்பா ளர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன், தொகு திக்குட்பட்ட சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டமன்ற தொகு திகளில், கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதைத்தொ டர்ந்து தலைவாசல் அருகே புளியங் குறிச்சி கிராமத்திற்கு சென்ற வேட்பாளர் மலையரசனுக்கு, விசிக உள்ளிட்ட கூட் டணி கட்சிகள் சார்பில் மேள தாளங் களுடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. அப்போது, விசிக கொடி நிற துண்டை தலையில் கட்டிக்கொண்டு, கழுத்தில் திமுக துண்டை போட்டுக் கொண்ட வேட்பாளர் மலையரசன், பறை இசைத்து, அங்கிருந்தவர்களு டன் நடனமாடினர். இதுதொடர்பாக காணொளி காட்சிகள் தற்போது இணை யத்தில் வைரலாகி வருகிறது.
பேருந்து அதிபர் வீட்டிலிருந்து ரூ.4.50 கோடி பறிமுதல்
மக்களவை தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மூலம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிக ளுக்கும், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புபுக்குழு, வீடியோ கண்கா ணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வருமான வரித்துறை மூலம் குறிப்பிட்ட இடங்களில் பறக்கும் படை யினர் அமைக்கப்பட்டு, பெரிய அளவில் நடைபெறும் பண பரிமாற்றங்களை கண் காணித்து வருகின்றனர். இதனிடையே, நாமக்கல் நகரம், மோகனூர் சாலையி லுள்ள காந்தி நகர் பகுதியில் தனியார் பேருந்து அதிபரி சந்திரசேகரன் (70) என்பவர் வசித்து வருகிறார். மேலும், இவருக்கு சொந்தமாக நிதி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளன. இவரது வீட் டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சென்னையிலிருந்து விரைந்த வந்த வருமான வரித்துறை பறக்கும்படை அதிகாரிகள், சந்திர சேகரனின் வீட்டுக்குள் சென்று திடீர் சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உரிய ஆவணங்களின்றி வைக்கப்பட்டி ருந்த ரொக்கப்பணம் ரூ.4 கோடியே 50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இந்த திடீர் சோதனையால் நாமக்கல் நக ரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.