கோவை, டிச.10- சிலம்பம், வில் வித்தை என ஐந்து கலைகளை ஒரே நேரத் தில், ஒரே இடத்தில் 500 மாணவ, மாணவிகள் இணைந்து செய்து உலக சாதனை படைத்தனர். விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வித மாக ஐந்து கலைகளை 500 மாணவ, மாணவிகள் இணைந்து செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். ஃபைட்டர்ஸ் அகாடமி சார்பாக கோவை மாவட்டம், குனிய முத்தூர் சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலாயா பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் யோகா, சிலம்பம், வில் வித்தை, கராத்தே, குங்பூ என 5 கலைகளை ஒரே இடத்தில் 500 மாணவ, மாணவிகள் இணைந்து செய்தனர். சுமார் ஏழு வயது முதல் 17 வயது மாணவ, மாணவிகள் வரை ஒரு மணி நேரம் தொடர்ந்து செய்த இந்த நிகழ்வு, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை செய்த மாணவ, மாணவிகளை கூடியிருந்த பெற்றோர் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர். கல்வி பயில்வதோடு விளையாட் டின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும், அதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்த உலக சாதனை நிகழ்ச் சியை நடத்தியதாக பள்ளியின் தாளாளர் ரவீந்திரன், முதல்வர் கார்த்திகாயனி ஆகியோர் தெரிவித்தனர். தொடர்ந்து நோபல் உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் ரமேஷ் குமார் சிவராஜ் உலக சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.