districts

img

கொல்லிமலை வனப்பகுதியில் பெரும் தீ

நாமக்கல், மார்ச் 29- கொல்லிமலையில் கடந்த நான்கு நாட்களாக பற்றி எரிந்து வந்த காட்டுத்தீயால், சுமார் 500 ஏக் கர் பரப்பளவிலான மூங்கில் மற்றும்  மூலிகை செடிகள் முற்றிலும் தீக்கி ரையாகின. நாமக்கல் மாவட்டத்தின் மிகச்சி றந்த சுற்றுலாத் தலமாக கொல்லி மலை விளங்கி வருகிறது. இங்கு  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங் களில் இருந்தும், ஆந்திரா, கேர ளம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அதிக ளவு சுற்றுலாப் பயணிகள் வருகை  தருகின்றனர். மேலும், இங்குள்ள  ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள் ளிட்ட முக்கிய அருவிகள் மிகவும்  பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்நி லையில் கொல்லிமலைக்கு செல் லும் சாலையில் மலையடிவாரப் பகுதியாக காரவள்ளி என்ற பகுதி அமைந்துள்ளது. கடந்த நான்கு  நாட்களுக்கு முன்பாக எதிர்பாராத விதமாக திடீரென காட்டுத்தீ ஏற்பட் டது. இந்த காட்டுத்தீயில் சுமார் 500  ஏக்கர் பரப்பளவில் மூங்கில், பலா,  மிளகு உள்ளிட்ட மரங்களும், மூலிகை செடிகளும் தீயில் எரிந்து  சாம்பலானது. தற்போது தீ பரவு வது முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ள  நிலையில், இது குறித்து விசாரணை  மேற்கொள்வதற்காக தமிழ்நாடு வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ கொல்லி மலைக்கு வருகை தந்து, தீ விபத்து  ஏற்பட்ட இடத்தில் ஆய்வு மேற் கொண்டார். காட்டுத்தீ பரவிய மலைப்பகுதி யில் இரண்டு கிலோமீட்டர் நடந்து  சென்ற, சுப்ரியா சாஹூ தீயை  அணைக்கும் பணியில் ஈடுபட்ட  வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். கொல்லிமலையில் இதுவரை நடந்த தீ விபத்தில் மிகப்பெரிய தீ விபத்தாக இது உள் ளது எனவும், வனத்துறை அதிகாரி கள் அதிக கவனத்துடன் செயல் பட வேண்டும் என வனத்துறையி னருக்கு சுப்ரியா சாஹூ அறிவுரை வழங்கினார்.