districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சேலம்: தொடர் குற்றத்தில் ஈடுபட்ட  5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலம், நவ.18- சேலத்தில் வழிப்பறி மற்றும் கடத்தி பணம் பறித்த குற்றங் களில் ஈடுபட்டு வந்த 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம், மிட்டாய்புதூர் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் சொந்த வேலையாக மாமாங்கம் பகு திக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பிரபாகரன், மணி மாறன், யுவராஜ், கௌதம் மற்றும் நவீன்குமார் ஆகியோர் காரில் சென்று வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி கருப்பு சாமியிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்றனர். இதுதொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, 5 பேரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், நிலம் விற்பனை மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந் தமாக சேலம் அழகாபுரம் புதூரை சேர்ந்த பிரவீன்குமார், அவ ரது நண்பர் பூபதி ஆகியோரை இந்த 5 பேரும் காரில் கடத்தி சென்று, தாக்கியதாக அழகாபுரம் காவல் நிலையத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரபாகரன் 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரபாகரன், மணிமாறன், யுவராஜ், கௌதம் மற்றும் நவீன்குமார் ஆகியோர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித் ததால் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.

குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழை நீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

இளம்பிள்ளை, நவ.18- இடங்கணசாலை அருகே குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள மழைநீரால் அப்பகுதி பொதுமக்கள் அவதிய டைந்து வருகின்றனர். சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, 8 ஆவது வார்டுக்குட்பட்ட கே.கே.நகர், காளியம்மன் கோவில் பகுதி யில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகு தியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலையில் தேங்கிய மழைநீர், 20 நாட்களுக்கு மேலாக அகற்றப்ப டாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியி ருப்பு வாசிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழைநீரை வெளியேற்ற நகராட்சி அதிகாரிகள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  சாலையில் மழைநீர் தேங்கியிருப்பதால் நடக்க முடியா மல் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வரு வதுடன், சிலருக்கு நோய்த்தொற்று மூலம் காய்ச்சல் ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் நேரில் ஆய்வு செய்து இப்பகுதியில் மழைநீர் தேங்காதவாறு நீரோடையினை தூர்வாரி நிரந்தர தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தபெதிக ஆர்ப்பாட்டம்

  கோவை, நவ.18-  கோவை பந்தையசாலை யில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். வருடத்திற்கு 8 லட்ச ரூபாய் வருமானம் உள்ள வர்கள் ஏழைகள் என்று  உச்சநீதிமன்றம் ஏற்று  கொண்டிருப்பதால், வரு மானவரித்துறை வருமான வரம்பை ரூபாய் 5 லட்சத்தி லிருந்து ரூபாய் 8 லட்சமாக ஒன்றிய அரசு உயர்த்த கோரி, கோவையில் தந்தை பெரி யார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை பந்தையசாலை யிலுள்ள வருமான வரித் துறை அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தபெதிகவின் கு.ராம கிருட்டிணன் தலைமை வகித் தார். இதில்,  திரளானோர் பங்கேற்றனர்.

ஆயுர்வேத தின பேரணி

திருப்பூர், நவ. 18 - சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, ஆயுர் வேத விழிப்புணர்வு பேர ணியை மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் துவக்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாண விகள் கலந்து கொண்டனர். திருப்பூர் மங்கலம் சாலையில் அமைந்துள்ள திருப்பூர் குமரன் மகளிர் கல் லூரியில் ஆயுர்வேத விழிப் புணர்வு பேரணி வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்த  பேரணியை திருப்பூர் மாநகர  காவல் ஆணையாளர் பிர பாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி யில் கல்லூரி மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் பங் கேற்று ஆயுர்வேத மருத்து வத்தின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந் தியபடி சென்றனர். குமரன்  கல்லூரியில் துவங்கிய  பேரணி ஆண்டிபாளையம், மாரியம்மன் கோவில் வீதி,  பாரதி நகர் வழியாக சென்று  மீண்டும் குமரன் கல்லூரி வந் தடைந்தது.

சார்பதிவாளர் விடுமுறை: பத்திரப்பதிவில் சிக்கல்

அவிநாசி,நவ.18- அவிநாசியில் சார்பதிவாளர்கள் விடு முறை என்பதால் பத்திரப்பதிவில் சிக்கல்  ஏற்பட்டுள்ளதாக  பொதுமக்கள் தெரிவிக் கின்றனர். அவிநாசி ஒன்றியம் 31 ஊராட்சி, திருமுரு கன்பூண்டி நகராட்சி, திருப்பூர் ஒன்றி யத்தில் ஒரு பகுதி உள்ளிட்ட பொதுமக்கள்  அவிநாசியில் அமைந்துள்ள பத்திரப்பதிவு  அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.  இந்த அலுவலகம் அவிநாசியில் திருப்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. தினசரி 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத் திரப்பதிவு செய்வதற்காக வந்து செல்கின் றனர். முகூர்த்த நாள் அன்று  கூடுதலாக பத் திரப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில்  கடந்த சில தினங்களாக பத்திரப்பதிவாளர் மற்றும் துணை பத்திரப்பதிவாளர் விடுமு றையில் உள்ளதாக தெரிய வருகிறது. இத னால் தலைமை கணக்கர் பத்திர பதிவு செய் யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், இருவரும் ஒரே நேரத்தில் விடுமுறை  எடுப்பதால் பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல்  நீடிக்கிறது. இது போன்ற சூழல்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

இளம்பிள்ளை, நவ.18- சங்ககிரி அருகே உள்ள நாரப்பன்சாவடி பகுதி சேர்ந் தவர் கண்ணன் (36). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 17  வயது சிறுமியை கடத்தி சென் றதாக சிறுமியின் பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகர ளித்தனர். அதன்பேரில் வழக் குப்பதிவு செய்து கண்ணனை தேடி வந்த நிலையில், 4 ஆண் டுகளுக்கு பிறகு சங்ககிரி காவல் துறையினர் சிறு மியை கடத்திய வழக்கில்  போக்சோ சட்டத்தின் கீழ் கண் ணனை கைது செய்து, சிறை யில் அடைத்தனர்.

வேலை வாங்கி தருவக்கூறி பண மோசடி பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார்

கோவை, நவ.18- வெளி நாட்டில் வேலை வாங்கி தருவக்கூறி பலரிடம் பண மோசடி யில் ஈடுபட்டதாக கோவை நகர குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டோர் புகார ளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோட் டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (29) என்பவர், கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வருகி றார். இவர் பீளமேடு, அண்ணாநகர் பகுதியில் எஸ்டி குளோபல் பிளேஸ் மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி னார். இணையதளத்தில் இந்த நிறு வனம் தொடர்பான தகவல்களை வெளியிட்டார். அதில் நியூசிலாந்து நாட்டுக்கு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி கொடுப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், வெளிநாட் டுக்கு ஆள்களை அனுப்ப எந்த அனு மதியும் இவர் பெறவில்லை. இதனை  நம்பிய பலரும் தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டனர். மதுரை, தூத் துக்குடி, திருநெல்வேலி, புதுக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களை சேர்ந்தவர்களிடம் முன்பண மாக ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளார். மேலும் அவர்களது பாஸ்போர்டை யும் வாங்கி வைத்துக்கொண்டார். இதற்கிடையே பணம் செலுத்திய வர்கள் நம்புவதற்காக வேலை கிடைத் ததற்கான போலி கடிதத்தை தயா ரித்து தமிழ்ச்செல்வன் அனுப்பியுள் ளார். மேலும், விமான பயணச்சீட்டு களையும் எடுத்து அதன் நகல்களை யும் அனுப்பி, கூடுதலாக பணம் வசூ லித்து வந்துள்ளார். விமான பயணச் சீட்டு வந்துவிட்டது; வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பலரும் பணம் செலுத்தினர். இதனிடையே மதுரை மாவட்டம், செல்லூரைச் சேர்ந்த விஜயன் என்பவர், வேலை  கிடைக்காததால் கோவை வந்து விசா ரித்தபோதுதான், தமிழ்ச்செல்வன் மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோவை நகர குற் றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார ளித்தார். இதேபோல் பணமோசடி செய்த தாக தமிழ்ச்செல்வன் மீது 16 பேர் புகார ளித்தனர். அதன்பேரில் காவல் உதவி  ஆய்வாளர் ஞானபிரகாஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டார். மேலும் தமிழ்ச்செல்வ னின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பலரிடம் வாங்கி வைத்திருந்த 44 பாஸ் போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட் டது. இதையடுத்து தமிழ்ச்செல்வன் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு  சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய் யப்பட்டு அவர் கைது செய்யப்பட் டார். தற்போது 16 பேர் மட்டும் ரூ.17 லட் சம் அளவுக்கு பணத்தை இழந்துள்ள தாக புகார் செய்துள்ளனர். ஆனால், 44  பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி  நடைபெற்று இருப்பதாக கூறப்படு கிறது.

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பணியிடை நீக்கம்

கோவை, நவ.18- கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த முருகேசன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் முருகேசன். இவர் மருதூர் ஊராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காமல் முருகேசன் உடந்தையாக செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.  மேலும், அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களிடம் தவறாக நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் முருகேசனை  தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டார்.

தம்பதியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி

கோவை, நவ.17- கோவில்பாளையம் அருகே வீட்டில் தூங்கி கொண்டி ருந்த தம்பதியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே உள்ள  கோட்டையாம்பாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் சின் னத்தம்பி என்ற செல்லத்துரை (50). கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அடையளம் தெரி யாத நபர் கதவு இடைவெளியில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றனர். இதையடுத்து தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்த தம்பதி தீயை அணைத்தனர். அப்போது சின்னத்தம்பிக்கு தோளில் தீக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் சின்னத்தம்பி புகார ளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.