districts

img

சட்டவிரோதமாக கருக்கலைப்பு: செவிலியர் உட்பட 5 பேர் கைது

தருமபுரி, செப்.21- காரிமங்கலம் அருகே வீட்டில் சட்ட விரோதமாக கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்று பரிசோ தித்து கருக்கலைப்பு செய்த செவிலியர் உட் பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள செம்மண்குழிமேடு என்ற  கிராமத்தில் சட்ட விரோதமாக இடைத்தரகர் மூலம் கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என பரிசோத னையில் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்ட  விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் தருமபுரி மாவட்ட ஆட்சி யரின் உத்தரவின்படி, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் சாந்தி  தலைமையிலான மருத்துவர்கள் பாலசுப்ர மணியம், சரவணகுமார் அடங்கிய குழுவினர் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன், உதவி ஆய்வாளர் ஆகி யோர் காரிமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில் செம்மண்குழிமேடு கிராமத்தில் உள்ள சுபாஷ் (28) என்பவரின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப் போது தருமபுரி அருகே உள்ள அழகாபுரி 3  ஆவது தெருவை சேர்ந்த கற்பகம் (38) என்ற  பயிற்சி செவிலியர் சட்ட விரோதமாக 7 கர்ப் பிணிகளுக்கு ஆணா? பெண்ணா? என்ற பாலின பரிசோதனை மேற்கொண்ட போது  கையும் களவுமாக பிடிபட்டார்.

மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் விஜயகுமார் (35) மற்றும்  தருமபுரி ஆசிரியர் காலனியைச் சேர்ந்த  இடைத்தரகர் சிலம்பரசன் (31), நல்லம்பள்ளி யைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் (35), அந்த வீட்டின் உரிமையாளர் சுபாஷ் (28) ஆகிய 5 நபர்களை பிடித்து காரிமங்க லம் போலீசார் கைது செய்தனர். இதைய டுத்து அவர்களிடமிருந்து ஸ்கேன் எந்திரம், 4  செல்போன்கள், 2 சொகுசு கார், ஒரு ஆட்டோ உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசா ரணை மேற்கொண்டனர். கைதான பயிற்சி செவிலியர் கற்பகம், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தருமபுரி பகுதியில் கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள சிசு குறித்து பரிசோதனை செய்ததாக தருமபுரி டவுன் போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் அவர் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் அவரது கணவர் உதவியுடன் கர்ப்பிணிகளுக்கு சட்ட  விரோதமாக ஆணா?

பெண்ணா? என்று பரி சோதனை செய்து வந்தார். அதில், பெண் சிசு  இருந்தால் கருக்கலைப்பும் செய்து வந் தார். இந்த கும்பல் கடந்த 2 வருடங்களாக தரும புரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்ததாக தெரியவந்தது. இதற்காக அவர்கள் தருமபுரி, கிருஷ்ண கிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள ஊர்களில் தலா ஒரு புரோக்கரை நிய மித்து தொடர் நெட்வெர்க் போல் செயல் பட்டு வருகின்றனர் என்பது தெரியவந்தது. திருமணம் முடித்து கர்ப்பம் தரிக்கும் பெண் களை அவர்கள் குறி வைத்து செயல்பட்டு  வந்தனர். மேலும், அந்த கும்பல் கருவில் இருக் கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்று பார்ப்பதற்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிக்கின்றனர். கரு வில் பெண் சிசு இருந்தால், அதனை கலைப் பதற்கு ரூ.15 ஆயிரம் முதல் பணம் வசூலிக் கின்றனர் என்பதும் தெரியவந்தது. இதைய டுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.