தாராபுரம், நவ.17- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழனி சாலை மணக்கடவு ஆலாங்காட்டுபிரிவு அருகே வியாழனன்று நேர்ந்த விபத் தில் 5 பேர் பலியானர். வெள்ளியன்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் தெரிவிக்கையில் கோவை, பெரியநாயக்கன்பாளையம், வஞ்சி யம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ் மணி (51). இவர் எல்எம்டபுள்யூ நிறுவ னத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (49) பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். செல்வராணி(70) மற்றும் அவருடைய கணவர் பாலகிருஷ்ணன் (78). திண்டுக்கல்லை சேர்ந்த கலாராணி (50) ஆகிய 5 பேரும் காரில் பழனியில் இருந்து தாராபுரம் வழியாக கோவைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பழனி தாராபுரம் சாலையில் மணக்கடவு, ஆலாங்காட்டுபிரிவு என்ற இடத்தில் கோவையில் இருந்து எரிபொ ருள் ஏற்றி வந்த டேங்கர் லாரி கார் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 5 பேரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு தாராபு ரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் 4 நான்கு பேரும் உயிரி ழந்ததாக தெரிவித்தனர். கலாராணி சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம் பவம் குறித்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வம் (29) என்பவரிடம் விபத்து குறித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் தாராபுரம் பகுதியை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிபொ ருள் ஏற்றி வந்த லாரி தீப்பிடிக்காத தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது என்று தெரிவித்தனர். தாராபுரம் அரசு மருத்துவம னையில் வைக்கப்பட்டிருந்த உடல்க ளுக்கு வெள்ளியன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவர்களது உறவினர்களுக்கு ஆறு தல் கூறினார்.