திருப்பூர், ஜூன் 10 - இடுவாய் ஊராட்சி சீராணம்பாளை யத்தைச் சேர்ந்த தியாகி பழனிச்சாமி யின் 44ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி வெள்ளியன்று கடைப்பிடிக்கப் பட்டது. 1978 - 79ஆம் ஆண்டு கால கட்டத்தில் திருப்பூர் மேற்கு ஏரியாவில் நடைபெற்ற விசைத்தறி தொழிலாளர் கூலி உயர்வு வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது, பழனிச்சாமியை விசைத்தறி முத லாளிகள் பின்புலத்தில் அதிமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்தோர், கோர மான முறையில் வெட்டிப் படுகொலை செய்தனர். அவரது நினைவு நாள் ஜூன் 9ஆம் தேதி சீராணம்பாளையத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. சீராணம்பா ளையத்தில் உள்ள அவரது நினைவிடத் தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து தியாகி பழனிசாமியின் புதுப்பிக்கப் பட்ட புகைப்படத்தை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் திறந்து வைத்தார். இதையடுத்து நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு சீராணம்பாளையம் கிளை மார்க்சிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினர், நில வள வங்கி இயக்குநர் கே.ஈஸ்வரன் தலைமை ஏற்றார். மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், மாவட்ட செயலா ளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ் ணன், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே. கணேசன், மாதர் சங்க ஒன்றிய செய லாளர் லட்சுமி ஆகியோர் பேசினர். இதில், தெற்கு மாநகர செயலாளர் டி.ஜெயபால், வடக்கு மாநகர செயலா ளர் பி.ஆர்.கணேசன் உட்பட கட்சி மற் றும் சிஐடியு சங்கத்தினர், சீராணம்பா ளையம் மற்றும் இடுவாய் பகுதி மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.கே. பழனிசாமி நன்றி கூறினார்.