திருப்பூர், ஜூன் 9- திருப்பூர் அருகே சீராணம்பா ளையம் தியாகி பழனிச்சாமியின் 43 ஆம் ஆண்டு நினைவஞ்சலி பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற் றது. இடுவாய் ஊராட்சி சீராணம்பாளை யத்தில் தியாகி பழனிச்சாமியின் நினை விடத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே. கணேசன், சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலை வர் பி.முத்துசாமி உள்ளிட்டோர் மல ரஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து சீராணம்பா ளையம் மார்க்சிஸ்ட் கட்சி கிளை அலுவலகம் முன்பாக நடைபெற்ற நினைவு தினப் பொதுக் கூட்டத்துக்கு சீராணம்பாளையம் கிளை உறுப்பினர் கே.ஈஸ்வரன் தலைமை வகித்தார். இதில் தியாகி பழனிச்சாமியின் பணி களை நினைவு கூர்ந்து மேற்கண்ட தலைவர்கள் உரையாற்றி னர். இவர்களுடன், சீராணம் பாளையம் 1ஆவது கிளைச் செயலாளர் பி.ரத்தினசாமி, 2ஆவது கிளைச் செயலாளர் எம்.பிரகாஷ், இடுவாய் தெற்கு கிளைச் செயலாளர் கே.கருப்புசாமி, வடக்கு கிளைச் செயலாளர் கே.சுந்த ரம்,பாரதிபுரம் கிளைச் செயலாளர் என்.கார்த்தி, இடுவாய் மாதர் சங்கக் கிளைச் செய லாளர் பி.இந்திராணி உள்பட மார்க் சிஸ்ட் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து பங்கேற்றனர். நிறைவாக சீராணம்பாளையம் வாலி பர் சங்கக் கிளைத் தலைவர் எம்.கௌதம் நன்றி கூறினார்.