districts

சின்ன வெங்காயத்திற்கு ஏற்றுமதி எண் உருவாக்க கோரிக்கை

திருப்பூர், ஆக.25- ஒன்றிய அரசு வெங்காய ஏற்று மதிக்கு 40 சதவிகித வரி விதித்தி ருப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப் புத் தெரிவித்துள்ளனர். மேலும், வர்த் தகப் பட்டியலில் சின்ன வெங்காயத் திற்கு தனியாக ஏற்றுமதி எண் உரு வாக்க வலியுறுத்தி உள்ளனர். ஒன்றிய அரசு கடந்த கடந்த 16 ஆம் தேதி அன்று இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத் திற்கு  40 சதவிகிதம் வரி விதித்து உள் ளது. இதனால், வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உள் நாட்டு சந்தையில் விலை வீழ்ச்சி  ஏற்பட்டு, கடும் இழப்பை சந்திப்பார் கள். பெரிய வெங்காயம் என்பது இந் திய அளவிலான பிரச்சனை, ஆனால் சின்ன வெங்காயம் என்பது தமிழ்நாட் டின் கோவை, திருப்பூர், ஈரோடு, திண் டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்ப லூர், தென்காசி ஆகிய மாவட்டங்க ளில் மட்டுமே விளைவிக்கக்கூடி யது, தமிழர்கள் வாழ்ந்து வரும் வெளி நாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்கா யம் ஏற்றுமதி செய்யப்பட்டு வரு கிறது.

ஆனால், ஒன்றிய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து ஒவ்வொரு முறையும் தடைகளை விதித்தும், வரிகளை விதித்தும் தமிழ் நாட்டு விவசாயிகளை வஞ்சித்து வரு கிறது என தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் குற்றஞ் சாட்டியுள்ளனர். ஏற்றுமதி வர்த்தகத்துக்கு சின்ன  வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டிற்கும் ஒரே எண் பயன்படுத் தப்பட்டு வருகிறது. இதைப் பிரித்து சின்ன வெங்காயத்திற்கென தனி  எண்ணை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோ தும், இதுவரை இக்கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை. சின்ன வெங்கா யத்திற்கு கிலோ ஒன்றிற்கு உற்பத்தி செலவு குறைந்தபட்சம் 30 ரூபாயாக இருந்து வருகிறது, குறைந்தபட்ச லாபத்தோடு சேர்த்து கிலோ ரூபாய் 45க்கு விற்றால் மட்டுமே கட்டுபடியா கும். தற்போது கட்டுப்படியான விலை கிடைத்து வந்த நிலையில், இந்திய அரசின் 40 சதவீதம் வரி விதிப்பு கிலோ வுக்கு 20 ரூபாயை குறைத்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிர்  செய்து வந்த மேற்கண்ட மாவட்டங்க ளைச் சேர்ந்த விவசாயிகள் கடும் பாதிப்பிற்கும், அதிர்ச்சிக்கும் உள் ளாகியுள்ளனர். நஷ்டமும் ஏற்பட்டுள் ளது.  விவசாயிகளின் மிக மோசமான நிலையை கருத்தில் கொள்ளாமல், நுகர்வோர்களை மட்டுமே கருத்தில் கொண்டு, தேர்தல் அரசியலை மன தில் வைத்து இதுபோன்ற செயல் களை ஒன்றிய அரசு செய்துள்ளது என விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.