திருப்பூர், ஜன.10- பல்லடம் அருகே ரூ.40 கோடி மதிப்பி லான இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில் நிலம் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த நாரணாபுரம் அங்காளம்மன் திருக் கோவிலுக்கு சொந்தமான 8.95 ஏக்கர் புஞ்சை நிலம், பல்லடம் திருப்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது. 40 கோடி மதிப் பிலான இந்த நிலத்தை பல்லடம் கரையான் புதூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், சேதுரா மலிங்கம், செந்தில் அமுதா உள்ளிட்ட 6 நபர் கள் ஆக்கிரமிப்பு செய்து, 30 வருட காலமாக கோவிலுக்கு குத்தகை தொகை செலுத்தா மல் விவசாயம் செய்து வந்துள்ளனர். இதனை அறிந்த இந்து அறநிலைய துறை இணை ஆணையர் ஜெயசந்திரன், இந்து அறநிலையத்துறை சார்பில் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற் படி நபர்களை ஆக்கிரமிப்புதாரர்களாக கருதி நிலத்தை கையகப்படுத்தி நபர்களை வெளியேற்றம் செய்திட திருப்பூர் இணை ஆணையருக்கு உத்தரவு வழங்கியது. இத னையடுத்து திங்களன்று பல்லடம் வட்டாட்சி யர் தேவராஜ், திருப்பூர் இந்து சமய அறநி லையத் துறை உதவி ஆணையர் செல்வ ராஜ், நாராணாபுரம் கிராம நிர்வாக அலுவ லர் மோகன்தாஸ் மற்றும் காவல்துறையி னரால் நிலம் மீட்கப்பட்டது. இந்த நிலம் நார ணாபுரம் அங்காளம்மன் கோயிலுக்கு சொந் தமானது என அறிவிப்பு பலகையும் வைக் கப்பட்டது.