districts

தாராபுரம் மக்கள் நீதிமன்றத்தில் ரூ.4.48 கோடிக்கு சமரச தீர்வு

தாரபுரம், ஜூன் 26- தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் ரூ.4.48 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.  தாராபுரம் வட்ட, சட்டப் பணிகள் குழு வின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதி மன்ற வாளகத்தில் தேசிய மக்கள் நீதிமன் றம் நடைபெற்றது. வட்ட சட்டப் பணிக்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி தர்மபிரபு தலைமையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. உரிமையியல் நீதிபதி மதி வதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  இதில் 34 மோட்டார் வாகன விபத்து  வழக்குகள், 114 உரிமையியல் வழக்குகள்,  232 குற்றவியல் சிறு வழக்குகள், 2 ஜீவனாம்ச  வழக்குகள், 2 குடும்ப வன்முறை வழக்கு கள், 3 மணி சூட் வழக்குகள் உள்ளிட்ட வழக் குளில் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த  மதிப்பு ரூ.4 கோடியே 48 லட்சத்து 21  ஆயிரத்து 132 ஆகும். இதில் 387 பயனாளி கள் தீர்வு பெற்றனர். இதில் அரசு வழக்கறி ஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக் கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடு களை வட்ட, சட்டப்பணிக்குழு நிர்வாகத்தி னர் செய்திருந்தனர்.