districts

img

ஈரோட்டில் 4 ஆயிரம் தபால் வாக்கு படிவம்

ஈரோடு, ஏப். 2- ஈரோடு மாவட்டத்தில், 85 வய திற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்தி றனாளிகள் ஆகியோரிடமிருந்து 12டி  படிவம் சுமார் 4 ஆயிரம் தபால் வாக்கு கள் பெறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங் கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சிய ருமான ராஜ கோபால் சுன்கரா, தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ்  ரஞ்சன் மீனா, அங்கீகரிக்கப்பட்ட அர சியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும்  வேட்பாளர்கள் கூட்டம் நடைபெற் றது. இதில் கூடுதல் மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்களை சட்ட மன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2222 வாக்குச்சா வடி மையங்களுக்கும் கட்டுப் பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரி பார்க்கும் இயந்திரம் அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநி திகள் முன்னிலையில் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதில் நிலையான கண்கா ணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படை குழுக்கள் மூலம் சுமார் ரூ.3 கோடியே 75லட்சத்து 78ஆயிரத்து 262  மதிப்பில் பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தபால் வாக்குகள் 85 வயதிற்கு  மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனா ளிகள் ஆகியோரிடமிருந்து 12டி  படிவம் சுமார் 4000 பெறப்பட்டுள் ளது. மேலும் 2300 காவலர்கள் தபால் வாக்கிற்கான படிவங்களை  வழங்கியுள்ளனர். பதற்றமான வாக் குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக் கப்படும் என்றார்.