பள்ளி மாணவரை தாக்கியவர் கைது
பென்னாகரம், ஜூலை 15- ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை அரசு பள்ளி மாண வரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்ட மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி யில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், அதே வகுப்பில் படிக்கும் மாணவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலாஜி, மாணவ – மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டிருந்தார். அப்போது மாணவியின் உறவினரான நாடார் கொட்டாய் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தங்கவேல் (40) என்பவர் தலைமை ஆசிரியர் அறைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவனை தகாத வார்த்தையில் பேசியும், தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், படு காயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு அரசு மருத்துவ மனையில் அனுமதித்தினர். இதையடுத்து தலைமை ஆசிரியர், அறைக்குள் புகுந்து மாணவனை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தங்க வேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்து பள்ளி மாணவனை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூய்மைப் பணியாளர் மீது கொடூர தாக்குதல்
கோவை, ஜூலை 15- கோவை, புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (56). இவர் கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர். இவர் கோவை மகளிர் கலைக் கல்லூரி அருகே உள்ள பகுதி யில் தூய்மைப் பணியின் போது, அப்பகுதியில் மது போதையில் தினேஷ் (32) என்பவர் தரையில் படுத்தி ருந்தார். அவரிடம், சற்று தள்ளிப்படுங்கள் எனக்கூறி யுள்ளார். இதனால் கோபமடைந்த தினேஷ், தன்னிடம் இருந்த மது பாட்டிலை எடுத்து ஐயப்பனை தாக்கியுள்ளார். இதில் ஐயப்பனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டி யுள்ளது. இச்சம்பவத்தால் தினேஷை, ராமநாதபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண் டனர்.
குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு கலந்தாய்வு
திருப்பூர், ஜூலை 15 - திருப்பூர் மாவட்டத்தில் குறு அங்கன்வாடி பணியாளர் கள், முதன்மை அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வுக் கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற் றது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டா ரங்களில் இருந்து 124 குறு அங்கன்வாடி பணியாளர்கள் தங்க ளுக்கான முதன்மை அங்கன்வாடி மையத்தினை தேர்வு செய் தனர். கலந்தாய்வுக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் துவங்கி வைத்தார். மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டெல்லா தலைமை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட உதவியாளர், புள்ளியல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இக்கலந் தாய்வு கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
பூ மார்க்கெட் அருகில் இறந்து கிடந்த ஆண் மயில்
திருப்பூர், ஜூலை 15 - திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள காட்டன் மார்க்கெட் வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகை தந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் பூ மார்க் கெட்டின் அருகில் உள்ள குப்பை கொட்டும் பகுதியில் தேசிய பறவையான ஆண் மயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இறந்து கிடந்த ஆண் மயிலை பூக்கடை ஊழியர் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த ஆண் மயிலை மீட்டு அடக்கம் செய்வதற்கு எடுத்துச் சென்றனர். இந்தியாவின் தேசிய பறவை ஆண் மயில் மர்மமான முறை யில் இறந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பூ மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட தலைமை எழுத்தர் பணியிடை நீக்கம்
திருப்பூர், ஜூலை 15 - அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் தலைமை எழுத் தாளர் லஞ்சம் கேட்டதாக வீடியோ வெளியான நிலையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு கோவை மண்டல துணை பதிவாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகில் பத்திர பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அவிநாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள 31 ஊராட்சி பகுதிகளில் நிலம், வீடு, இட பத்திரப் பதிவு செய்வதற்கு மக்கள் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடக்கும் அலுவலகங்களில் அவிநாசி பத்திரப்பதிவு அலுவல கமும் ஒன்று. இந்நிலையில் அவிநாசியில் உள்ள பத்திரப்பதிவு அலுவ லகத்தில் கருவலூரைச் சேர்ந்த நபர் ஒருவர் வில்லங்கச் சான்று பெற அலுவலக தலைமை எழுத்தர் தனபாலிடம் விவரம் கேட்டுள்ளார். அதற்கு தலைமை எழுத்தர் தனபால் அலுவலக கட்டணம் 121 என்றும், ஒரு வில்லங்கச் சான்று பெற ஆயிரம் செலவாகும் என தெரிவித்துள்ளார். 20 பக்கங்கள் இருப்பதால் பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என கேட்டுள் ளார். இதனை அந்நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த நிலையில் வீடியோவின் அடிப்படையில் அவிநாசி பத்திரப்பதிவு தலைமை எழுத்தர் தனபாலை பணியிடை நீக்கம் செய்து கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் சாமிநாதன் உத்தரவிட்டுள் ளார்.
போதை கும்பலுக்கு எதிராக வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜூலை 15 - தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனைக்கு எதி ராக போராடிய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத் தின் கீழ் கைது செய்ய வேண்டும். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உடுமலை ஒன்றிய கமிட்டி தலைவர் ராமசாமி தலையில் 14ஆம் தேதி மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சேலம் நிர்வாகியை தாக்கிய போதை பொருள் விற்பனை கும்பல் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண் டும். தமிழகம் முழுவதும் முறைகேடாக தடை செய்யப் பட்ட லாட்டரி, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.அருள், உடுமலை ஒன்றிய செயலா ளர் தமிழ்த்தென்றல் கண்டன உரையாற்றினர். இதில் திரள னோர் கலந்து கொண்டார்கள். அதேபோல் ஊத்துக்குளி டவுன் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் சௌந் தர்யா தலைமை வகைத்தார். வாலிபர் சங்க முன்னாள் ஊத் துக்குளி ஒன்றிய தலைவர் சசிக்குமார், தாலுக்கா செயலாளர் கே.பாலமுரளி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். தாலுக்கா குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு
திருப்பூர், ஜூலை 15 – தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இணைந்து காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சர்வ தேச இளைஞர் திறன் தினத்தன்று பெரிச்சிபாளையம் அரசு நடு நிலைப் பள்ளியில் சனியன்று நெகிழி இல்லா தமிழகம் விழிப் புணர்வு நிகழ்வு நடைபெற்றது. பெரிச்சிபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் அழகப்பன் சிறப்புரையாற்றினார். ஆசிரியர் கனகராஜா வாழ்த்திப் பேசி னார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகள் ராஜபிரபு, விஜய், மதுகார்த்திக், ஜெயசந்திரன் ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், மஞ்சப்பை வழங்கியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள் நெகிழி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல் லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
போலீஸ் ஜீப் மோதி சிறுமி பலியான விவகாரம்: ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய 4 பேர் கைது
திருப்பூர், ஜூலை 15 - திருப்பூர் காங்கேயம் சாலையில் கடந்த ஐந்தாம் தேதி போலீஸ் வாகனத்தை இயக்கி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக வீரசின்னன் மீது 304 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அஜாக்கிரதை யாக வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளை வித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வீரசின்னன் திருப் பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதா கவும் விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஊர்காவல்படை காவலர் வீர சின்னன் புகார் அளித்ததன் அடிப்படையில் வீடியோ பதிவுகளை வைத்து நல்லூர் போலீ சார் வியாழனன்று முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா (22), நல்லிகவுண்டர்நகர் பகுதியை சேர்ந்த அஜித் குமார் (27), முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (42) மற்றும் மண்ணரை பகுதியை சேர்ந்த ராம்குமார் (30) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத் தனர். நல்லூர் போலீசார் வீடியோ பதிவுகளின் அடிப்படை யில் மேலும் சிலரை தேடி வருவதாகத் தெரிவித்தனர்.
தி.க.இளைஞரணி ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜூலை 15 - வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில் லையா என கேட்டு தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் சதி யைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழ கத்தின் இளைஞரணி, மாண வர் கழகம், மகளிர் பாசறையி னர் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருப் பூர் மாநகராட்சி முன்பு திருப் பூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏரா ளமானோர் கலந்து கொண்ட னர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத் தில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப் பப்பட்டது.
சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
கோவை, ஜூலை 15- சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் கௌரி எச்ச ரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, மருத்துவரின் பரிந்துரையின்றி மருந் தகங்கள், போலி மருத்துவர்களிடமிருந்து கருக்கலைப்பு மாத் திரை வாங்கி சாப்பிடுவதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கர்ப்பிணிகளின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். இதை தவிர்க்க அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பான கருக் கலைப்பு சேவைகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகளை அரசு மருத்துவமனைகளிலேயே வழங்கி வருகின்றனர். அதை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அரசின் ஆணையை மீறி சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரை கள் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மற்றும் போலி மருத் துவர்கள் மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மீரா தலைமையிலான மருத்துவக்குழு கடும் நடவ டிக்கை எடுத்து வருகிறது. அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித் தல், சிறைத்தண்டனை மற்றும் உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைள் எடுக்கப்படும். பொதுமக்கள் விழிப்புடன் செயல் பட்டு பாதுகாப்பான கருக்கலைப்பு குறித்த அரசின் விதி முறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.
அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச்சென்ற 15 ஆட்டோக்கள் பறிமுதல்
கோவை, ஜூலை 15- பொள்ளாச்சியில் அதிக எண்ணிக்கையில் மாணவர் களை ஏற்றிச்சென்ற 15 ஆட்டோக்களை வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர் களை பெற்றோர்கள் ஆட்டோக்களில் அனுப்பி வைக்கின்ற னர். ஆனால், ஆட்டோக்களில் விதிகளை மீறி நிர்ணயிக்கப் பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் மாணவர் களை ஏற்றி செல்வதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந் தம் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுல கிருஷ்ணன், நிர்மலா ஆகியோர் மகாலிங்கபுரம், பல்லடம் சாலை, கோவை சாலை ஆகிய பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி சென்றதாக ஆட்டோ, வேனை பறி முதல் செய்து அபராதம் விதித்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகை யில், சிறப்பு தணிக்கையில் தகுதிச்சான்று, ஓட்டுநர் உரிமம் இன்றி அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி சென்ற 15 ஆட்டோக்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், அபராதம் மூலம் ரூ.67 ஆயிரம் வசூலிக்கப்பட்டது, என்றார்.
2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
நாமக்கல், ஜூலை 15- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், ஜேடர்பாளையம் அருகே உள்ள வெட்டுக்காட்டுபுத்தூரைச் சேர்ந்தவர் தனசேக ரன் (30). மினி சரக்கு லோடு ஆட்டோ ஓட்டி வரும் இவரது மனைவி சசிகலா (26). இத்தம்பதிக்கு திவித் (5), தர்ஷன் (3) என ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அனை வரும் வழக்கம்போல இரவு வீட்டில் தூங்கினர். இதையடுத்து சனியன்று அதிகாலை தனசேகரன் கண் விழித்து பார்த்த போது மனைவி, குழந்தைகள் இல்லாததைக்கண்டு அதிர்ச்சி யடைந்தார். தொடர்ந்து அருகே உள்ள விவசாய கிணற்றில் பார்த்த போது மனைவி சசிகலா, குழந்தைகள் திவித், தர்ஷன் ஆகியோர் சடலமாக கிடந்ததையடுத்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நல்லூர் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் லிப்ட் வசதி: பயணிகள் மகிழ்ச்சி
சேலம், ஜூலை 15- சேலம் பழைய பேருந்து நிலையமானது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹ரூ.96.53 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு பேருந்து நிலையமாக மறுசீரமைக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூன் 11 ஆம் தேதியன்று திறந்து வைத்தார். தொடர்ந்து ஈரடுக்கு பேருந்து நிலையத் தில் இரு தளத்திலிருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டு வரு கிறது. இதில், தரைதளத்திலிருந்து ராசிபுரம், ஆட்டையாம் பட்டி, அம்மாப்பேட்டை, கன்னங்குறிச்சி, அயோத்தியாபட்ட ணம், வாழப்பாடி மார்கமாக செல்லும் பேருந்துகளும், முதல் தளத்திலிருந்து ஜங்சன், ஓமலூர், தாரமங்கலம், இளம் பிள்ளை மார்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படு கின்றன. பயணிகள் வசதிக்காக, தரைதளத்திலிருந்து, முதல் தளத்திற்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அத் துடன் புதிதாக 4 லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பேருந்து நிலையம் திறக்கப்பட்டும் லிப்ட் வசதி செயல்படா மல் இருந்தது. இதனால், பயணிகள் கடும் சிரமமடைந்து வந்த னர். குறிப்பாக, முதியவர்கள் தரைதளத்திலிருந்து முதல் தளம் செல்லவும், அங்கிருந்து தரை தளத்திற்கு வரவும் முடி யாமல் அவதியடைந்தனர். மேலும் உடமைகளை எடுத்துச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், லிப்ட் வசதியை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அதிகாரி கள் உடனடி நடவடிக்கை எடுத்ததன் பேரில், வெள்ளியன்று 4 லிப்ட்களும் செயல்பாட்டிற்கு வந்தது. இதற்காக தனி உதவி யாளர்கள் நியமிக்கப்பட்டு, லிப்ட் இயக்கப்படுகிறது. இத னால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, ஜூலை 15- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட் டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெள் ளியன்று 4450 கிலோ பட் டுக்கூடுகள் கொண்டு வரப் பட்டன. இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.556க்கும், குறைந்தபட்ச மாக ரூ.251க்கும், சராசரி யாக ரூ.404.99க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.18.02 லட்சத்திற்கு ஏலம் போனது.