ஈரோடு மாவட்டம், சுண்டாக்கம்பாளையம் ஊராட்சியில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை கே.சுப்பராயன் எம்.பி., திறந்து வைத்தார். இதில் காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் சரவணன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.