திருப்பூர், ஜன.22- திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக் கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 381 மனுக்கள் அளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் தலைமையில் திங்களன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்களிடமி ருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 381 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன், மனு தாரர்கள் முன்னிலையிலேயே விசாரனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் த.ப. ஜெய்பீம் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர்கள் (பொது) விஜயராஜ், (நிலம்) மலர், மாவட்ட ஆதிதிரா விடர் நல அலுவர் புஷ்பாதேவி, தனிதுணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆர்.குமார ராஜா, துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைக ளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.