districts

img

மேல்முறையீடு செய்த 36 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி

திருப்பூர், ஜூலை 29 - திருப்பூர் கே.2092. தொட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசின்  பொது நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் மேல்முறை யீடு செய்த தகுதி வாய்ந்த 36 பயனாளிகளுக்கு கடன் தள்ளு படி செய்யப்பட்டது. கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாக குழு  உறுப்பினர்கள் முன்னிலையில் அவர்களது நகைகள் வழங் கப்பட்டன இந்நிகழ்வில் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்  கே.ராமசாமி, துணைத்தலைவர் ஏ.பி.சுப்பிரமணியம் மற்றும்  நிர்வாக குழு உறுப்பினர்கள் கே.மாரப்பன், ரங்கசாமி, ரவிச் சந்திரன், சாரதா, ருக்குமணி, கிருஷ்ணமூர்த்தி, சுப்பன் மற்றும்  கூட்டுறவு சங்க செயலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.