கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் 35 ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே, கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவு மற்றும் தனியார் பள்ளி இணைந்து சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் பதாகைகளை ஏந்தி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.