கோவை, நவ.5- தமிழகத்தில் பஞ்சு விலை தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் சமயத்தில், தற்போது ஒரு கண்டி பஞ்சு ரூ.64 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படு கிறது. பஞ்சை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் ஜவுளித்தொழிலில் நாடு முழுவதும் 1.10 கோடிக்கும் மேற்பட் டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். முக்கி யத்துவம் பெற்றுள்ள ஜவுளித்தொழில் பஞ்சு விலை உயர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாற்றில் முதல் முறை யாக கடந்த மே மாதத்தில் ஒரு கண்டி (356 கிலோ) பஞ்சு ரூ.1 லட்சத்தை கடந்தது. பஞ்சு விலை உயர்வால் நாடு முழுவதும் ஜவுளி சங்கிலித்தொடரிலுள்ள அனைத்து தொழில் களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை யடுத்து தொழில் அமைப்புகளின் கோரிக் கையை ஏற்று ஒன்றிய அரசு பஞ்சு இறக்கு மதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவிகித வரியை அக்.31 ஆம் தேதி வரை ரத்து செய்து உத்தர விட்டது. இதனால் பெரிய நூற்பாலைகள் வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்யத் தொடங்கினர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வந்த பஞ்சு விலை தற் போது ஒரு கண்டி ரூ.64 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாதங்களில் ரூ.35 ஆயிரம் வரை குறைந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்த நூற்பாலைகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பினர் கூறுகையில், பஞ்சு விலை தற்போது ஒரு கண்டி ரூ.64 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படு கிறது. கடந்த மே மாதத்தில் இந்தியாவில் ஒரு கண்டி பஞ்சு ரூ.1 லட்சத்தை கடந்த காரணத் தால், பெரிய நூற்பாலை நிர்வாகத்தினர் வெளிநாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்யத் தொடங்கினர். ஆனால், பஞ்சு விலை எதிர்பார்த்ததை விட அதிகமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் பஞ்சு விலை ஒரு கண்டிக்கு ரூ.35 ஆயி ரத்து 500 குறைந்துள்ளது. இதனால் வெளி நாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்த மற்றும் பஞ்சு வருகைக்காக புக்கிங் செய்து காத்திருக்கும் நூற்பாலை நிர்வாகத்தினர் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். கப்பல்களில் பஞ்சு ஏற்றிக்கொண்டு வர கொள்கலன்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட கப் பல் போக்குவரத்தில் உள்ள பிரச்சனைகள் காரணமாக வெளிநாட்டு பஞ்சு இந்தியா வந்து சேருவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற் பட்டுள்ளளது. பஞ்சு விலை தாறுமாக அதி கரிப்பதும், மீண்டும் வேகமாக குறைந்து வருவதும் பல கஷ்டங்களை ஏற்படுத்தியுள் ளது, என்றனர்.