districts

img

திருப்பூர் புத்தகத் திருவிழாவிற்கு மொத்தம் 30 ஆயிரம் மாணவர்கள் வருகை

திருப்பூர், பிப். 3 - தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வா கம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து  நடத்தும் 19ஆவது திருப்பூர் புத்தகத் திருவி ழாவில் இதுவரை 30 ஆயிரம் மாணவ, மாண விகள் பார்வையிட்டுள்ளனர். திருப்பூர் மாநகரில் ஆண்டுதோறும் பண் பாட்டுத் திருவிழாவாக திருப்பூர் புத்தகத் திரு விழா நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாவட்டந்தோறும் அரசு நிர்வாகத்தில் சார் பில் புத்தகத் திருவிழா நடத்தப்படும் என்று  முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் திருப்பூர் புத்தகத் திருவி ழாவை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத் துகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை புத் தகத் திருவிழா தொடங்கியதில் இருந்து வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 30 ஆயிரம்  மாணவ, மாணவிகள் நேரில் வருகை தந்து  பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென் றுள்ளனர். கல்வித்துறை மூலம் அனைத்துப் பள்ளிக ளிலும் குழந்தைகளை அழைத்து வந்து புத் தகத் திருவிழாவை காண ஏற்பாடு செய்யப் பட்டது. குழந்தைகளை புத்தகத் திருவிழா வுக்கு அழைத்து வர பேருந்து வசதியும் செய் யப்பட்டது.

இது தவிர தனிப்பட்ட முறையி லும் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் குழந்தை களை புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வந்து பார்வையிடச் செய்தனர்.வரும் ஞாயிற் றுக்கிழமையுடன் புத்தகத் திருவிழா நிறைவு  பெற இருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை  வரை கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 30  ஆயிரம் மாணாக்கர்கள் இங்கு வந்துள்ளனர். திருப்பூர் மட்டுமின்றி உடுமலை, தாராபுரம்,  காங்கேயம், ஊத்துக்குளி, அவிநாசி, பல்ல டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் இருந்தும் மாணவர்கள் புத்தகக் கண் காட்சியைப் பார்வையிட்டனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 4 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து சென்ற தாக புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 65 பேருந்துகளில் 74  நடைகள் மூலம் இதுவரை இல்லாத அள வுக்கு ஆறாயிரம் மாணவ, மாணவிகள் புத்த கத் திருவிழாவுக்கு வந்து பார்வையிட்டுச்  சென்றனர்.மாவட்ட நிர்வாகம் சுற்றறிக்கை  அனுப்பி ஏற்பாடு செய்த நிலையில், பல்வேறு  பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் புத்தக கண்காட்சியைப் பார் வையிட்டனர்.

குறிப்பாக நடுநிலைப் பள்ளிக ளில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் புத் தக அரங்குகளில் விடுதலைப் போராட்ட வீரர் கள், தேசத் தலைவர்களின் வாழ்க்கை வர லாறு குறித்த சிறு நூல்களை காசு கொடுத்து  ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் என்றும் ஏற் பாட்டாளர்கள் தெரிவித்தனர். புத்தகத் திரு விழா இன்னும் இரு தினங்கள் மட்டுமே நடை பெறும் நிலையில் மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வருவார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் 19 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு இம்முறை புத்தகத் திருவி ழாவில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாண வர்கள் வருகை தந்திருப்பது சாதனை அள வாகும். அத்துடன் அறிவுக்கு விருந்து படைக் கும், சமூக சிந்தனையைத் தூண்டும் சிறு, சிறு  புத்தகங்களையும் அவர்கள் வாங்கிச் சென் றது நாளைய தலைமுறை மீது நம்பிக்கை வளர்ப்பதாக உள்ளது. அத்துடன் இப்புத்தகத் திருவிழாவில் தொலைநோக்கி மூலம் வான் நோக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள், பெண்கள், முதி யோர் என வயது வேறுபாடில்லாமல் அனை வரும் ஆர்வமுடன் பங்கேற்று வானில் காணும் நிலவு தோற்றத்தை உருப்பெருக்கி பார்த்தனர். அறிவியல் மனப்பான்மைக்குத் தூண்டுதலாக இப்புத்தகத் திருவிழா வெற்றி  பெற்றிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு கள் சான்றாகத் திகழ்கின்றன.