districts

img

ரூ.3.54 லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளி மின்விளக்கு

திருப்பூர், மார்ச் 14- முதலிபாளையம் ஊராட்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.54  லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட சூரிய ஒளி மின்விளக்கு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழனன்று நடைபெற்றது. திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சி, வெள்ளக்கரடு பகு தியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், கட்சியின்   மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன், தெற்கு ஒன்றியச்  செயலாளர் சி.மூர்த்தி, ஊராட்சி மன்றத்தலைவர் மயூரிப்பி ரியா, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் கே.மணி(எ) முருகசாமி,  4 ஆவது வார்டு உறுப்பினர் ஆர். வைத்தீஸ்வரி, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.சுப்பி ரமணியம், எம்.மகேஷ், எஸ்.ஜானகி உட்பட பலர் பங்கேற்ற னர்.