கோவை, மே 22-
அசாமிலிருந்து கோவை வந்த விரைவு ரயிலில் 3.5 கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. அசாம் மாநிலத்திலி ருந்து கோவை வழியாக திரு வனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 12508) கோவை ரயில் நிலை யம் வந்தது. அப்போது பய ணிகள் பெட்டியில் கழிவறை அருகில் கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று கிடப்ப தாக ரயில்வே போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அப் பெட்டியில் ஏறி பேக்கை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது தெரியவந் தது. விசாரணையில், கஞ்சா கடத்தி வந்த அடையாளம் தெரியாத நபர்கள் போலீ சில் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் 3.5 கிலோவை கஞ் சாவை ரயில் பெட்டியி லேயே விட்டு சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் யார்? என் பது குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.