உடுமலை, அக்.16- கனமழையின் காரணமாக ஊர் சாவடி கட்டடம் திடீரென சரிந்து விழுந்த தால், கட்டிட வேலைக்கு செல்ல ஊர் சாவடி கட்டிடத்தில் நின்ற தொழிலாளர் கள் மூன்று பேர் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலூக்கா, கொழுமம் ஊராட்சியில் உடு மலை பழனி செல்லும் ரோட்டில் பொது மக்கள் பயன்படுத்தும் ஊர் சாவடி உள் ளது. திங்கள் கிழமை காலை முதல் மழை பெய்து கொண்டு இருந்தால் இப் பகுதியை சேர்ந்த முரளி (25), மணி கண்டன் (28), கெளதம் (29) ஆகியோர் கட்டிட வேலைக்கு பேருந்தில் செல்ல ஊர் சாவடி கட்டிடத்தில் நின்று கொண்டி ருந்தனர். தொடர்ந்து பெய்த கனமழை யால், கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, மழைக் காக ஒதுங்கி நின்று கொண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். இதனையறிந்த, அக்கம் பக்கத்தினர், இடிபாட்டிற்குள் சிக்கி படு காயமடைந்தவர்களை மீட்டு உடுமலை அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியி லேயே மூவரும் உயிரிழந்தனர். ஊர் சாவடியின் மேற்கூரை இடிந்த விபத்து மூன்று கட்டடத்தொழிலாளிகள் உயிரி ழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனி டையே பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி உத் தரவிட்டுள்ளது. முதல்வர் இரங்கல் இதுகுறித்து தமிழக முதல்வர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்திருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கொழுமம் கிரா மம், கொழுமம் - பழனி முதன்மைச் சாலையிலுள்ள சாவடியின் முகப்பு மேற் கூரை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததில், முரளி ராஜா (35), கௌதம் (29) மற்றும் மணிகண்டன் (28) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து, அவர் களை உடுமலைப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மூவரை யும் இழந்து வாடும் குடும்பத்தினருக் கும். உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட் சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தர விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசு வேலை வழங்கிடுக பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப நிலையை கருதில் கொண்டு நிவாரண தொகையை கூடுதல் படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை சார்ந் தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இது போல மக்கள் கூடும் பகுதிகளில் இருக்கும் பழைய கட்டி டங்களை முறையாக ஆய்வு செய்து, இதுபோல் சம்பவங்கள் நிகழாதவாறு பராமரிப்பு செய்ய வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன் வலியு றுத்தியுள்ளார்.