சேலம், செப்.19- சேலம் மற்றும் ஈரோட்டில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. தமிழ்நாடு முழுவதும் திங்க ளன்று விநாயகர் சதுர்த்தி கொண் டாடப்பட்டது. சேலம் மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டி ருந்தன. அதன்ஒருபகுதியாக மேட்டூர் அருகே உள்ள தொட்டில் பட்டி கிராமத்தில் செந்தில் என்ப வரது மகன் சந்தோஷ் (14), சிவ ராமன் என்பவரின் மகன் நந்த குமார் (14) மற்றும் இவர்களுடன் இரண்டு நண்பர்கள் என நான்கு நபர்களும் சேர்ந்து வீட்டின் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபட் டுள்ளனர். இதைத்தொடர்ந்து தொட்டில்பட்டி அருகே 16 கண் மதகு உபரிநீர் போக்கி பகுதியில் உள்ள குட்டையில் விநாயகர் சிலையை கரைக்க சென்றுள் ளனர். அப்பொழுது சந்தோஷ் மற்றும் நந்தகுமார் ஆகிய இரு வரும் சேற்று நீரில் மூழ்கியுள் ளனர். இதைக்கண்ட மற்ற இரண்டு நபர்கள் கிராம மக்களிடம் சென்று கூறிய நிலையில், கிராம மக்கள் அனைவரும் வந்து சிறு வர்களை தேடினர். இதைத் தொடர்ந்து இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட் டனர். இதுகுறித்து தகவலறிந்த கரு மலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இரண்டு சிறுவர் கள் உடலையும் மீட்டு பிரேத பரி சோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரண்டு சிறுவர் கள் உயிரிழந்த சம்பவம் அக்கிராம பகுதியில் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. ஈரோட்டில் வாலிபர் பலி இதேபோன்று ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பகுதி யில் விநாயகர் சிலை ஒன்று வைக் கப்பட்டு பூசை செய்யப்பட்டது. இச்சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் கரைத்தனர். இந்நிகழ் வில் ஊஞ்சமரத்தோட்டம் அருகே பொதியமூப்பனூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் சங்கரநாராயணன் (20) என்பவரும் கலந்து கொண்டார். அனைவரும், கரையேறிய நிலையில் சக்தி சர்க்கரை ஆலை தொழிலாளி யான சங்கரநாராயணன் மட்டும் கரையேறவில்லை. உடன் வந்த நண்பர்கள் என பலரும் அவரை தேடி பார்த்தனர். ஆனால், அவர் கிடைக்காததால் பவானி ஆற்றில் நீரில் மூழ்கி இருக்கலாம் எனக் கருதி காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். இந்நிலையில், ஆப்பக் கூடல், பெருந்துறை, கவுந்தப்பாடி வழியாக செல்லும் பவானி ஆற்றங்கரையோர பகுதியில் அவரை உயிரிழந்த நிலையில், தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர். இதன்பின் பிரேத பரி சோதனை செய்யப்பட்டு உறவி னர்களிடம் அவரது உடல் ஒப்ப டைக்கப்பட்டது.