மேட்டுப்பாளையம், அக்.12- முதல்முறையாக உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட மலை ரயில் என்ஜின் 2 ஆவது முறையாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்திலிருந்து தினசரி உத கைக்கு நூற்றாண்டு பழமைவாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்திலி ருந்து குன்னூருக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி ரயில் என்ஜின்க ளும், குன்னூரிலிருந்து உதகைக்கு டீசல் மூலம் இயங்கும் ரயில் என்ஜின் களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடன் ரூ.9.30 கோடி மதிப்பில் 7 மாதத்தில் புதிய மலை ரயில் எஞ்சின் தயா ரிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த அக்.5 ஆம் தேதியன்று திருச்சி பொன்மனை ரயில்வே பணிமனை யில் புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரயில் எஞ்ஜின் ட்ரெய்லர் வாகனத் தில் ஏற்றப்பட்டு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதன்பின் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள லோகோ செட் பணிமனையில் புதிதாக தயாரிக்கப் பட்ட மலை ரயில் என்ஜின் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட் டது. அச்சோதனைக்கு பின்னர் முதல் கட்டமாக மேட்டுப்பாளையத்திலி ருந்து உதகை செல்லும் மலை ரயில் பாதையில் உள்ள அடர்லி ரயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் வெற்றியடைந்த பின்னர் புதனன்று 2 ஆவது கட்டமாக மேட்டுப்பாளை யத்திலிருந்து குன்னூர் வரை புதிய மலை ரயில் என்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. புதிதாக தயாரிக்கப் பட்ட டீசல் மூலம் இயங்கும் நீராவி ரயில் என்ஜினில் 4 பெட்டிகள் இணைக் கப்பட்டு சோதனை ஓட்ட ரயில் புறப் பட்டு சென்றது. மலை ரயில் பாதை யில் சோதனை ஓட்ட ரயில் செல்லும் போது, என்ஜினில் ஏற்படும் மாற்றங் களை ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.