சேலம், ஏப்.18- சேலம் மாவட்டத்திற்குட்பட்ட நாடாளுமன்ற தொகுதியில் 1257 மையங்களில் 29 லட்சம் பேர் வாக்க ளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. மேலும், சேலம் நாடாளு மன்ற தொகுதியில் பதற்றமான வாக் குச்சாவடி மையங்களில் கண்கா ணிப்பு கேமரா மற்றும் உயர் பாது காப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 4 நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு வடக்கு, தெற்கு மற்றும் வீரபாண்டிய ஆகிய சட்டசபை தொகுதிகளும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகு தியில் கெங்கவள்ளி, ஆத்தூர், ஏற்காடு, ஆகிய சட்டசபை தொகுதிக ளும் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி யில் மேட்டூர் சட்டமன்ற தொகுதியும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு சங்ககிரி தொகுதியும் உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்கா ளர்கள் உள்ளனர். சேலம் மாவட்டத் தில் மொத்தம் 1257 மையங்களில் 3260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன. சேலம் நாடாளுமன்ற தொகுதி யில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 25 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டத் தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்பு வசதிகளுடன், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அரசி யல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 235 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 15 வாக்குச்சாவடிகள் மிகப்ப தற்றமானவை என கண்டறியப்பட் டுள்ளன. அங்கு, கண்காணிப்பு கேமரா மூலம் மாநில தேர்தல் ஆணை யர் அலுவலகம் மற்றும் மாவட்ட பொது பார்வையாளர் தேர்தல் அலுவ லர் ஆகியோர் நேரடியாக கண்கா ணிக்கின்றனர். தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என 16 ஆயிரம் பேர் சேலம் மாவட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.