districts

போக்சோ வழக்கில் 25ஆண்டு சிறைத் தண்டனை

திருப்பூர், ஆக.6- திருப்பூர் மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில், வெள்ளியன்று ஒரே  நாளில் 3 போக்சோ வழக்கு களுக்கு தீர்ப்புகள் வழங்கப் பட்டன. திருப்பூர், போயம்பாளை யத்தை சேர்ந்தவர் சிபி (22). இவர்  பணியாற்றி வந்த பனியன் நிறுவ னத்தில் உடன் வேலை செய்த பெண்ணின் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து, பாலி யல் வன்கொடுமை செய்தார். இது  தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில்,  கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ், திருப்பூர் கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சிபியை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர்  நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  

நீதிபதி பாலு தீர்ப்பு அளித்தார்.   கடத்தல் மற்றும் பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்ட சிபிக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ. 2  ஆயிரம் அபராதம் விதித்து  நீதிபதி  தீர்ப்பளித்தார். இதோபோல், பல்லடம் பகுதியை சேர்ந்த 39 வயது ஆண்  தனது 14 வயது  மகளிடம் 3 ஆண்டு களாக பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்டார். இது தொடர்பாக சிறுமி, தாயிடம் தெரிவிக்கவே பல்லடம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் புகார் அளித்தார். அதன்படி போக்சோ வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதி மன்றத்தில் நடந்தது. இதில் நீதிபதி  பாலு தீர்ப்பு அளித்தார். அதில் தந்தைக்கு சாகும் வரை  சிறைத் தண்டனை மற்றும் 4 ஆயிரம் அப ராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். இதோபோல், வெள்ள கோவிலை சேர்ந்தவர் சதிஷ் (26).  குடிப்பழக்கத்துக்கு அடிமையா னவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த  4ஆம் வகுப்பு படித்து வந்த 8 வயது  சிறுமியை பள்ளி முடிந்து திரும்பும் வழியில்  குடிபோதையில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அப்போது சிறுமி கத்தி கூச்சல் போடவே சிறுமியை விட்டுவிட்டு அங்கி ருந்து தப்பினார். இது தொடர்பாக போக்சோ வழக்கு மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் சதிஷ் கைது செய்யப் பட்டார். இந்த வழக்கு திருப்பூர்  மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நீதிபதி பாலு  தீர்ப்பு அளித்தார். சதிஷூக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். இதையடுத்து, மேற்கண்ட 3  வழக்குகளில், 3 பேரும் கோவை  மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர். இந்த வழக்குகளில் அரசு  தரப்பு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜரானர்.