திருப்பூர், மார்ச் 1 - தமிழ்நாட்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) பொதுத் தேர்வு திங்க ளன்று தொடங்குகிறது. திருப்பூர் மாவட்டத் தில் 25 ஆயிரத்து 863 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதவுள்ளனர். இதையொட்டி தேர்வு மையங்கள் தயார்படுத்தும் பணிகள் சனியன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேல் நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுக் கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள் ளது. அதன்படி தமிழ்நாடு அரசு தேர்வு துறை யால் நடத்தப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) பொதுத் தேர்வு திங்க ளன்று துவங்குவதையொட்டி, திருப்பூரில் உள்ள தேர்வு மையங்கள் தயார்படுத்தும் பணிகள் சனியன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு 92 தேர்வு மையங்களில் நடைபெறவுள் ளது. 217 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 25 ஆயிரத்து 863 மாணவ மாணவியர் பங்கேற்று தேர்வெழுதுகின்றனர். தனித்தேர்வர்களாக 379 பேர் தேர்வு எழுத உள்ளனர். மேலும் பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான வினாத்தாள் கள் மாவட்டத்தில் 4 இடங்களில் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டு வருகிறது. இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். பறக்கும் படையில் 150 ஆசிரியர்கள்: மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங் களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பா ளர்களாக 92 தலைமை ஆசிரியர்களும், 92 துறை அலுவலர்களும், அறை கண்காணிப் பாளர்களாக பணியாற்ற 1570 ஆசிரியர்க ளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு களில் முறைகேடுகள் செய்தல், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண் காணிப்பதற்கு தனித் தனியாக பறக்கும் படை கள் அமைக்கப்படவுள்ளது. பறக்கும் படையி னர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீர் பார்வையிட்டு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுபவோர் மீது நடவடிக்கை எடுப்பர். இதற்காக முதன்மை கல்வி அலுவலர் மூலம் 150 ஆசிரியர்களை கொண்ட பறக் கும் படை அமைக்கப்படவுள்ளது. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் வினாத்தாள் மையங்கள்: தேர்வினை முன்னிட்டு சனியன்று தேர்வு மையங்கள் தூய்மைப் படுத்தப்பட்டு மேசைகளில் தேர்வு எண்கள் எழுதும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேர்வு மையங்களில் தகவல் பலகைகளில் மாணவர் களின் தேர்வு எண்கள் மற்றும் தேர்வு மைய எண் உள்ளிட்டவையும், தேர்வு மையங்க ளுக்கு செல்லும் வழிகாட்டியும் ஒட்டப்பட் டது. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையங் கள் சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர் களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திங்க ளன்று காலை தேர்வு துவங்கப்படுவதற்கு முன்பு பலத்த பாதுகாப்புடன் இங்கிருந்து வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.