districts

சேலம் சரகத்தில் கடந்த ஆண்டில் 234 ரவுடிகள் குண்டாசில் கைது

சேலம், ஜன.2- சேலம் சரகத்திற்குட்பட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த ஆண்டில் தொடர் குற் றச்செயலில் ஈடுபட்ட 234 ரவுடிகள், கொள்ளையர்கள் குண் டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற செயலை தடுக்கும் வகையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் ரவுடி, கொள்ளை யர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு போலீசார் சிறையில் அடைத்து வருகின்றனர். குற்ற சம்பவங் களை தடுக்க போலீசாரால் இத்தகைய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக் குகளில் எதுவானாலும் 3க்கும் அதிகமான வழக்குகள் இருந்தால் தான், குண்டர் தடுப்பு சட்டத்தை  பயன்படுத்த முடியும் என்ற நிலை நிலை இருந்தது. அதை அரசு மாற்றி அமைத்து சிறுமிகள் மீதான பாலியல் வன் கொடுமை, கொடூர கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடு படும் நபர்களை உடனே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை வைக்க அனுமதித்துள்ளது.

மாநிலம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் ரவுடிகள் குற்ற வரலாறு பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் இடம்பெற் றுள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளை போலீசார் தொடர்ந்து  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த நபர்கள், மீண் டும் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் பட்சத்தில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டில் சேலம் சரகத்திற்குட்பட சேலம் மாநகர், மாவட்டம் மற்றும் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 234 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டு சிறை  வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, சேலம் மாநகரில் 129 பேரும், சேலம் மாவட்டத்தில் 41 பேரும், நாமக்கல்லில் 17  பேரும், தருமபுரியில் 23 பேரும், கிருஷ்ணகிரியில் 24  பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். மேலும், நடப்பாண்டிலும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டாசில் கைது செய்வதில் போலீசார் அதிக கவனம் செலுத்தி வரு கின்றனர்.