districts

img

திருப்பூரில் வெள்ளிவிழா ஆண்டு தீக்கதிர் சந்தா சேர்ப்பு

திருப்பூர், அக். 30 – திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய தீக்கதிர் சந்தா சேர்ப்பு  இயக்கத்தில் முதல் தவணையாக பெறப் பட்ட 1089 சந்தாக்களுக்கு உரிய ரூ.21லட் சத்து 34ஆயிரத்து 450 மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட் டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழு கடந்த 25 ஆண்டுகளாக தீக் கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை வெற்றிக ரமாக நடத்தி வருகிறது. வெள்ளி விழா ஆண் டான 2023இல் கூடுதல் சந்தாக்கள் சேர்ப்பது  என்று இலக்கு நிர்ணயித்து மார்க்சிஸ்ட் கட்சி யினர் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி முதல் அனைத்து நகர, கிராமப்புறங்களிலும் மக் களை சந்தித்து தீக்கதிர் சந்தா சேர்ப்பில் ஈடு பட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகரம், ஒன்றியம், வேலம்பா ளையம் மற்றும் அவிநாசி பகுதிகளில் சேக ரிக்கப்பட்ட தீக்கதிர் சந்தாக்களை ஒப்ப டைக்கும் சிறப்புப் பேரவைக் கூட்டங்கள் பல் வேறு பகுதிகளில் ஞாயிறன்று நடை பெற்றது. இதில் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், மதுக்கூர்  ராமலிங்கம், என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் பங் கேற்று சந்தா தொகைகளைப் பெற்றுக் கொண்டனர். கட்சியின் மாநகர, ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்டு சந்தா தொகையை வழங்கினார்கள்.  தெற்கு ஒன்றியக் கமிட்டி சார்பில் ஜெய் நகர் மற்றும் இடுவாய் ஆகிய இடங்களில் நடைபெற்ற பேரவைக் கூட்டங்களில் மொத் தம் 193 சந்தாக்களுக்கு உரிய ரூ.3லட்சத்து  80ஆயிரத்து 300 வழங்கப்பட்டது. தெற்கு  மாநகரக் கமிட்டி சார்பில் கருவம்பாளை யத்தில் நடைபெற்ற நிகழ்வில் 93 சந்தாக்க ளுக்கு உரிய ரூ.1லட்சத்து 83ஆயிரத்து 550  வழங்கப்பட்டது. வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிக ளில் சேகரிக்கப்பட்ட 271 தீக்கதிர் சந்தாக் களுக்கு உரிய தொகை ரூ.5லட்சத்து 38 ஆயிரத்து 900 பாண்டியன் நகரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்டது. வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 236 சந்தாக்களுக்கு உரிய தொகை ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 750 ஒப்படைக்கப்பட்டது. முருங்கப்பாளையம், பத்மாவதிபுரம், எம்எஸ் நகர், என்ஆர்கே புரம் ஆகிய இடங்களில் பேரவைக் கூட்டங் கள் நடைபெற்றன.  அவிநாசி ஒன்றியம் கருணைபாளையம், அவிநாசி, திருமுருகன்பூண்டி ஆகிய மூன்று  இடங்களில் நடைபெற்ற பேரவைக் கூட்டங் கள் மூலம் 146 தீக்கதிர் சந்தாவுக்கு உரிய  ரூ.2லட்சத்து 79ஆயிரத்து 650 ஒப்படைக்கப் பட்டது. 15 வேலம்பாளையம் நகருக்கு உட் பட்ட அனுப்பர்பாளையம், வேலம்பாளை யம் மற்றும் அணைப்பாளையம் பகுதிக ளில் நடைபெற்ற பேரவைக் கூட்டங்களில் 150  தீக்கதிர் சந்தாவுக்கு உரிய ரூ.2லட்சத்து 94 ஆயிரத்து 300 ஒப்படைக்கப்பட்டது. முதல் தவணையாக மொத்தம் 1089 தீக்க திர் சந்தா சேர்க்கப்பட்டு அதற்குரிய ரூ.21 லட்சத்து 34ஆயிரத்து 450 தொகை வழங்கப் பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தீக்கதிர் சந் தாக்களை சேர்த்து இலக்கை வெற்றிகர மாக நிறைவு செய்வதற்கு மார்க்சிஸ்ட் கட்சி யினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.