திருப்பூர், மார்ச் 2 - திருப்பூரில் பின்னலாடை இயந் திரங்கள், தொழில்நுட்பங்களுக்காக நடத்தப்படும் நிட் - டெக் 2024 கண் காட்சி திருமுருகன் பூண்டி சுற்றுச் சாலையில் உள்ள ஹைடெக் இன்டர் நேஷனல் டிரேட் ஃபேர் வளாகத்தில் 2 லட்சம் சதுர அடியில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி கடந்த மார்ச் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங் கியது. தொடக்க விழாவில் நிட் டெக் கண்காட்சி சேர்மன் எம்.ஏ.ராயப்பன் வரவேற்றார். நிட்மா தலைவர் அகில் சு.ரத்தினசாமி, சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் இந்திய ஏற்றுமதி சங் கங்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏ. சக்திவேல் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத் தலைவர் சோழா ஏ.பி.அப்புக்குட்டி, ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே. எம்.சுப்பிரமணியம், டெக்பா டி.ஆர்.ஸ்ரீகாந்த், டிப் அகில் எம்.எஸ்.மணி, டீமா எம்.பி.முத்துரத்தினம் உள் ளிட்டோர் பங்கேற்றனர். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த வளாகத்தில் 15 நாடுகளைச் சேர்ந்த 250 பங்கேற்பாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளனர். பின்னலாடை துறை சார்ந்த அனைத்து வகை இயந் திரங்களும் இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. தையல் ஊசி முதல் பேக்கிங் வரையிலான அனைத்து நவீன இயந்திரங்களும் இடம் பெற் றுள்ளன. ஜெர்மன், இத்தாலி, ஜப் பான், சீனா, சிங்கப்பூர் மற்றும் இந் தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த இயந்திர தயாரிப்பு நிறுவனங் கள் இடம் பெற்றுள்ளன. திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் அவர வர் தேவைக்கு ஏற்ப, பொருளாதார சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு இயந்திரங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இங்குள்ளது. சாயமேற்றும் இயந்திரத்தில் மறு சுழற்சி தொழில்நுட்பத்துடன், அடர் உப்பு இல்லாத வசதி கொண்ட புதிய இயந்திரத்தை ஜெர்மன் நிறுவனம் அமைத்துள்ளது. அங்கேயே செயல் முறை செய்து காட்டப்படுகிறது. அதேபோல் மிகக்குறைந்த 2 சதவி கித சேதாரத்துடன் கட்டிங் இயந்தி ரங்களை இத்தாலி, ஜப்பான் நிறுவ னங்கள் கொண்டு வந்துள்ளன. மேலும், நிட்டிங், செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பு இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள், பசுமை சுற் றுச்சூழல் விதிமுறைக்கு உட்பட்ட இயந்திரங்கள், உபகரணங்களும் இடம் பெற்றுள்ளன. ஆசியாவிலேயே பின்னலாடைத் தொழில் துறைக்கென்று தனியாக நடத்தப்படும் நிட் டெக் கண்காட்சி. உலகின் பல்வேறு நாடுகளிலும், இந் தியாவின் பல பகுதிகளிலும் தயா ரிக்கப்படும் இயந்திரங்கள், தொழில் நுட்பங்களை ஒரே இடத்தில் நேரில் பார்த்து வாங்குவதற்கான வாய்ப்பை இந்த கண்காட்சி ஏற்ப டுத்திக் கொடுத்துள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி திங்களன்று நிறைவு பெறுகிறது. பின்னலாடை தொழில் வர்த்தகம் உயர்வதற்கு இக்கண் காட்சி மிக முக்கிய பங்காற்றி வருகி றது என்று நிட் டெக் தலைவர் எம்.ஏ. ராயப்பன் தெரிவித்தார்.