ஒன்றிய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் 2021 ஓய்வூதியர் தினம் கோவையில் வியாழனன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்.சின்னசாமி, மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன், தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாநிலத் தலைவர் கோ.முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.