districts

img

இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் தீ விபத்து: 20 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதம்

தாராபுரம், டிச. 26 - திருப்பூர் மாவட்டம் தாரா புரத்தில்  இருசக்கர வாகன  பழுது நீக்கும் கடையில் ஏற் பட்ட தீ விபத்தில் ரூ.12.லட் சம் மதிப்புள்ள 20 இருசக்கர  வாகனங்கள் சேதமாகின. தாராபுரம் இறைச்சி மஸ் தான் நகரை சேர்ந்தவர் மணி கண்டன். இவர் காமராஜபு ரம் திருப்பூர் சாலையில் இரு சக்கர வாகன பழுது நீக்கும்  கடை நடத்தி வருகிறார். இந் நிலையில், வழக்கம்போல  இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். கடை யின் அருகில் வசிப்பவர்கள் கடை தீப்பிடித்து  எரிவதாகக் கூறியுள்ளனர். தகவல் அறிந்து மணிகண்டன் சென்று பார்த்தபோது, கடை யில் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இதை யடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை அனைத் தனர். இதில், வாடிக்கையாளர்களிடமிருந்து பழுது நீக்க தர வாங்கி வைத்திருந்த 20 இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமாயின. இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன்  மனைவி கிருஷ்ணாத்தாள் அருகாமையில் ஓலை வீடு அமைத்து வசித்து வருகிறார். இரு சக்கர வாகன கடையில் தீவிபத்து ஏற்பட்ட போது ஓலை குடிசையும் எரிந்து நாசமானது. நல்வாய்ப்பாக கிருஷ்ணாத்தாள் மகள் வீட் டிற்கு சென்று விட்டதாள், உயிர்யிழப்புகள் ஏற்படவில்லை. இரு சக்கர வாகனம் பழுது  நீக்கும் கடையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 20  இருசக்கர வாகனங்களும், கிருஷ்ணாத் தாள் வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள் களும் என மொத்தம் ரூ.13 லட்சம் மதிப்புள்ள  பொருள்கள் தீயில் எரிந்து நாசமானதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை நடத்தி  வருகின்றனர்.