உதகை, ஜூன் 5- நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிகாரிகள் மேற் கொண்ட சோதனையில், 20 கிலோ பிளாடிஸ்டிக் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் முழுவதும் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. அதனை மீறி பிளாஸ் டிக் பயன்படுத்துபவர்களை கண் காணித்து அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சுற்று லாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட் களை கொண்டு வந்தால் கல்லாறு, பர்லியாறு, குஞ்சப்பனை உள்ளிட்ட 11 சோதனைச்சாவடிகளில் பிளாஸ் டிக் சோதனை மேற்கொள்ளப்படு கிறது. அதேபோல, நீலகிரி மாவட் டத்தில் உள்ள அனைத்துக் கடை களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் அவ் வப்போது சோதனை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலை யில், நீலகிரி மாவட்டத்தில் கூட லூர், உதகை, குன்னூர், கோத்த கிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், உதகை நகர் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, வட்டாட் சியர் ராஜசேகரன், வருவாய் ஆய் வாளர் மகேந்திரகுமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, மார்க்கெட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடை களுக்கு ரூ.38,500 அபராதம் விதிக் கப்பட்டது. அத்துடன் மாவட்டம் முழுவதி லும் நடைபெற்ற சோதனைகளில் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக் கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. இச்சோதனையின்போது உதகை மாவட்ட நகராட்சி மார்க்கெட் பகு தியில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.