districts

சேலம்: ரூ.2.05 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

சேலம், டிச.6- சேலம் புத்தகத் திருவிழாவில் ரூ.2.05 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ள தாகவும், 2.36 லட்சம் பேர் பார்வையிட் டுள்ளதாக ஆட்சியர் செ.கார்மேகம் தெரி வித்தார். சேலம் புதிய பேருந்து நிலையம்  அருகில் உள்ள மாநகராட்சித் திடலில்  கடந்த நவ. 21 ஆம் தேதி தொடங்கிய புத் தகத்திருவிழா, புதனன்றுடன் (டிச. 6)  நிறைவடைந்தது. இதனிடையே, புத் தகத்திருவிழா சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்த அனைவருக் கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும்  நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் செ.கார்மே கம் கலந்து கொண்டு பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர் கள், மாவட்ட நிர்வாகம் ஒருங்கி ணைந்து இந்த புத்தகக் கண்காட்சியை நடத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் இந்த புத்தகக் கண்காட்சி அமைத்திட நிதியு தவி வழங்கியுள்ளதற்கு பாராட்டுக ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விழா வில் முன் எப்போதுமில்லாத வகை யில் வாசிப்பாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பி னரும் பயன்பெறும் வகையில், உலகின் தலைசிறந்த ஓவிய அரங்குகள், புகைப் படக் கண்காட்சி, உலக விருதுகள் பெற்ற புத்தகங்கள், திரையரங்குகள், கோளரங்கம் என பல்வேறு அரங்குகள் அமைக்கபட்டுள்ளன. சேலம் மாவட்டத்தின் வரலாறு குறித்த புத்தகங்களைக் கொண்டு ஓர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இப் புத்தகத் திருவிழாவில் உலகின் தலை சிறந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.  சாகித்ய அகாதெமி விருது பெற்ற புத்த கங்கள், ஞானபீட விருது பெற்ற புத்த கங்கள் என பல்வேறு விருது பெற்ற  புத்தகங்கள் இங்கு காட்சிப்படத்தப் பட்டிருக்கின்றன. புத்தகத் திருவிழா வில் 1,03,436 பள்ளி மாணவ, மாணவிக ளும், 6,556 கல்லூரி மாணவ, மாணவி களும், 4,332 ஆசிரியர்கள், 1,22,121 பொதுமக்கள் என மொத்தம் 14 நாட் களில் 2,36,446 நபர்கள் பங்கேற்று பயன் பெற்றுள்ளனர். மேலும், 1,74,120 புத்த கங்கள் ரூ.2.05 கோடி மதிப்பீட்டில் விற்பனையாகியுள்ளன. சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தகங்கள் காட்சிப்படுத்தப் படும், என்றார். இந்நிகழ்ச்சியில், சேலம் மாநக ராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் பெ. மேனகா ஆகியோர் கலந்து கொண்டனர்.